இந்திய கார் விற்பனை சந்தையில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் மாருதி சுசூகி மோட்டார் எப்போதும் இல்லாமல் சமீப காலமாக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. உள்நாட்டு நிறுவனங்களான மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ்-ன் எழுச்சி ஹுண்டாய், கியா, ஆகியவைற்றின் பட்ஜெட் மாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள காரணத்தால் மாருதி சுசூகி -யின் சந்தை பங்கீடு குறைந்துள்ளது.
இந்த சந்தை பங்கீட்டை மீண்டும் உயர்த்தும் நோக்குடன், இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் எஸ்யூவி டிரெண்டுக்கு ஏற்ப அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் எட்டு புதிய SUV மாடல் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சுசூகி நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசூகி , டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் இந்தத் தகவலை வெளியிட்டார். இந்தியாவில் 40 ஆண்டுகளாக இயங்கும் சுசூகி , தற்போது மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ள நிலையில், வரலாற்று சாதனை அளவான 50 சதவீத சந்தைப் பங்கை மீண்டும் அடைய இந்த புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.
மாருதி சுசூகி பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 1.05 சதவீதம் வரையில் சரிந்து ஒரு பங்கு விலை 16,140 ரூபாய் அளவில் உள்ளது. இதேவேளையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வரும் இந்நிறுவன பங்குகள் 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 44 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி இந்தியாவில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. குறிப்பாக மாருதி சுசூகி-யின் சிறிய கார்கள் மற்றும் பயணியர் வாகனங்களில் முன்னிலை வகித்தது. ஆனால் தற்போது ஹூண்டாய், டாடா, மஹிந்திரா போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் SUV பிரிவில் வலுவான போட்டியை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக சுசூகியின் சந்தைப் பங்கு குறைந்துள்ளது.
இந்தியாவில் வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், SUVகளின் தேவை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி சுசூகி தனது இழந்த நிலையை மீட்டெடுக்க முயல்கிறது. இதேவேளையில் பைக் வாங்குவோரை கார் வாங்க வைக்கும் முயற்சியாக மீண்டும் சிறிய ரக கார்களின் விற்பனையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறது மாருதி சுசூகி.
மாருதி சுசூகி அறிமுகம் செய்யும் 8 புதிய மாடல் எஸ்யூவி கார்கள் பெட்ரோல், டீசல், ஹைபிரிட், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வகைகளில் வரலாம். சுசூகி இந்தியாவில் 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications