ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான சாப்ட்பேங்க் குழுமத்தின் நிறுவனர் மசாயோஷி சன், புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பில் எதைப்பற்றி விவாதிக்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதிய கூட்டணி முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்வது தொடர்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பதற்கு முன்னதாக, மசாயோஷி சன் இந்தியாவின் பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியை சந்தித்துப் பேசியுள்ளது தான் மசாயோஷி சன்-ன் இந்திய பயணத்தில் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
முகேஷ் அம்பானியும் - மசாயோஷி சன் இருவரும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் கூட்டணி, இந்தியாவில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முகேஷ் அம்பானி மற்றும் என்விடியா நிறுவனத்துடன் இணைந்து ஏஐ தொழில்நுட்ப கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளை நடத்தி வரும் வேளையில், தற்போது ஜப்பான் சாப்ட்பேங்க் குழுமமும் இதில் இணைய உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சாப்ட்பேங்க் இந்தியாவில் பல முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓ-வில் பெரும் தொகையை சாப்ட்பேங்க் சம்பாதித்தது. மேலும், ஆஃப் பிசினஸ் என்ற இந்திய ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் நிறுவனத்திலும் சாப்ட்பேங்க் முதலீடு செய்துள்ளது, இது 2025 ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடியுடன் வரும் சந்திப்பு இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் கூட்டு முயற்சிகள் மற்றும் முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 வருடத்தில் முகேஷ் அம்பானி அதிகப்படியான தொகையை டெலிகாம், டெக் துறையில் முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தான் ஆஸ்தான வர்த்தகமாக இருந்தாலும், கடந்த 10 வருடத்தில் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!



Click it and Unblock the Notifications