வாடகை வீடுகளில் வசிக்கும் பலருக்கு சொந்தமாக ஒரு குடிசையாவது கட்டி அதில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்து வருகிறது. அதற்காக சிலர் சிறுக சிறுக சேமிக்கத் தொடங்குகின்றனர். இருந்தாலும் விலைவாசி உயர்வு, ரியல் எஸ்டேட் விலை உயர்வு போன்றவை வீடு வாங்குவதற்கு ஏதுவாக இல்லை. சரி கடன் வாங்கியாவது வீடு வாங்கலாம் என்றால் ஈஎம்ஐ சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அதன் பிறகு ஏன் கடன் வாங்கினோம்? என்று யோசிக்கத் தொடங்குகின்றனர்.
எனவே இது போன்ற சிக்கலில் சிக்குவதற்கு முன் உங்களுடைய தனிப்பட்ட நிதியின் அடிப்படை விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எந்த நேரத்தில் எவ்வளவு கடன் வாங்க வேண்டும்? எவ்வளவு கடன் வாங்கினால் வரும் வருமானத்திற்கு ஈஎம்ஐ செலுத்த முடியும் என்ற பல விஷயங்களைக் கவனித்து தான் லோன் பெற வேண்டும். சரியான திட்டமிடல் இருந்தால் போதும் எளிதில் லோன் பெற்று வீடு வாங்கி ஈஎம்ஐ செலுத்துவதை எளிதில் சமாளிக்க முடியும்.

இந்தப் பதிவில் வீட்டுக் கடன் பெறுவதற்கான அடிப்படை ஃபார்முலா குறித்து தான் பார்க்கவுள்ளோம். வீடு வாங்குவதற்கு கண்டிப்பாக அதிக பணம் தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான மக்கள் இதற்காக வீட்டுக் கடனை தான் நாடுகின்றனர். வீட்டுக் கடன் என்பது நீண்ட கால கடன். அதோடு ஒரு மாத ஈஎம்ஐ தொகையைச் செலுத்தவில்லை என்றாலும், அதற்கு வட்டியையும் அபராதத்தையும் சேர்த்து செலுத்த வேண்டி வரலாம்.
எனவே லோன் பெற முடிவெடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதியை எவ்வாறு நிர்வகிக்க போகிறீர்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வீட்டு கடன் பெறுவதற்கு என்று ஒரு ஃபார்முலா உள்ளது. அந்த ஃபார்முலாவைப் பின்பற்றி கடன் வாங்கினால் எந்த பிரச்சினையும் இல்லை. ஈஎம்ஐ ஒருபுறம் செலுத்திக் கொண்டிருந்தாலும், மறுபுறம் உங்களுடைய செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள முடியும்.
50:30:20: இந்த பார்முலாவில் உள்ள முதல் 50 என்பது அத்தியாவசிய செலவுகளைக் குறிக்கிறது. உதாரணமாக வாடகை, பில்கள், ஈஎம்ஐ, மளிகை பொருட்கள் போன்றவற்றுக்கு உங்களுடைய வருமானத்தில் 50 சதவீதத்தை பயன்படுத்த வேண்டும். 20 சதவீதத்தை ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்ய பயன்படுத்த வேண்டும். அரசாங்கத் திட்டங்களான பிபிஎப், பெண் குழந்தை வைத்திருந்தால் சுகன்யா சம்ரித்தி யோஜனா, ஆண் குழந்தை இருந்தால் செல்வ மகன் சேமிப்பு திட்டம் போன்றவற்றில் சேமிக்கலாம். மீதமுள்ள 30 சதவீதத்தை வேறு செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.
இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். உங்களுக்கு ரூ.1 லட்சம் வருமானம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இதில் அத்தியாவசிய செலவுகளுக்காக ரூ.50,000-த்தை பயன்படுத்த வேண்டும் இந்த 50,000 ரூபாய்க்குள் தான் உங்கள் வீட்டுக் கடன் ஈஎம்ஐ-யும் செலுத்த வேண்டும். உங்கள் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தால் 50:30:20 விதியின்படி உங்கள் மொத்த ஈஎம்ஐ தொகை ரூ. 30,000-த்தை தாண்டக்கூடாது.
ரூ.50,000-த்தில் மீதமுள்ள 20,000 ரூபாயில் பிற அத்தியாவசிய செலவுகளை அடக்க வேண்டும். 20,000 ரூபாயை ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 30,000 ரூபாயை பிற்காலச் செலவுகளுக்காக பயன்படுத்தலாம். எனவே இது போன்ற ஃபார்முலாக்களை பயன்படுத்தி உங்கள் நிதி நிலையை தெரிந்து கொண்டு கடன் பெற்றால் ஈஎம்ஐ செலுத்துவதை திறம்பட சமாளிக்க முடியும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications