கோயம்புத்தூர்: தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்கிச் சேவைகள் மே மாதம் 2024 இல் பாதிக்கப்படவுள்ளன, எனவே உங்கள் நிதி பரிவர்த்தனைகளைத் திட்டமிடுவது அவசியம். குறிப்பாக மே 1 ஆம் தேதி வங்கிகள் செயல்படுமா என்பது மக்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரிய குழப்பமாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை பட்டியல் படி, மே 2024 மாதத்தில் ஞாயிறுகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட வங்கிகள் அதிகபட்சமாக 14 நாட்கள் மூடப்பட்டிருக்கும்.

மே 1, 2024 அன்று மகாராஷ்டிரா தினம் மற்றும் மே தினம் (தொழிலாளர் தினம்) கொண்டாட்டங்களுக்காக சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாள் பட்டியல் குறிப்பிடுகிறது.
மே 1 ஆம் தேதி (புதன்கிழமை) வங்கிகள் மூடப்படும் மாநிலங்களின் பட்டியல்: மே தினத்தையொட்டி வருகிற புதன்கிழமை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, அசாம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மணிப்பூர், கேரளா, வங்காளம், கோவா, பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
மே தினம் (தொழிலாளர் தினம்) என்றால் என்ன?
சர்வதேச தொழிலாளர் தினம், சில நாடுகளில் தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் பொதுவாக மே தினம் என்று குறிப்பிடப்படுகிறது. மே தினம் (தொழிலாளர் தினம்) என்பது உலகளவில் தொழிலாளர்களையும், தொழிலாள வர்க்கத்தையும் கொண்டாடும் நாள் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா தினம் என்றால் என்ன?: மகாராஷ்டிரா தினம், மகாராஷ்டிரா மாநிலத்தின் உருவாக்கத்தைக் கொண்டாட இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் கொண்டாடப்படும் மாநில விடுமுறை. இதுவும் மே 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மே மாதத்தில் வரும் பிற விடுமுறைகள் தினங்கள் பட்டியல்:
மே 7- மக்களவை பொதுத் தேர்தல் 2024 (செவ்வாய்) - குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா.
மே 8- ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் (புதன்) - மேற்கு வங்காளத்தில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
மே 10- பசவ ஜெயந்தி / ஆக்ஷய திருதியை - கர்நாடகாவில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
மே 13- மக்களவை பொதுத் தேர்தல் 2024 (செவ்வாய்) - ஸ்ரீநகர்
மே 16- மாநில தினம் (வியாழக்கிழமை) - சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 20- மக்களவை பொதுத் தேர்தல் 2024 (திங்கள்) - மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
மே 23- புத்த பூர்ணிமா (வியாழக்கிழமை) - திரிபுரா, மிசோரம், மத்தியப்பிரதேசம், சண்டிகர், உத்தரப்பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஜம்மு, லக்னோ, வங்காளம், புது தில்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
மே 25- நஸ்ருல் ஜெயந்தி / மக்களவை பொதுத் தேர்தல் காரணமாகத் திரிபுரா, ஒரிசா ஆகிய பகுதிகளில் வங்கிகள் மூடப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications