சென்னை: தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வாயிலாகவும் எம்பிபிஎஸ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 11,700 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இதில் 5050 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கின்றன. மீதமுள்ள இடங்கள் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நான்கு தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.
எம்பிபிஎஸ் படிப்பு: தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் இடங்களில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகின்றன. இது தவிர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு இடங்களும் இருக்கின்றன. இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் எம்பிபிஎஸ் படிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கட்டணங்கள் உயர்வு: மருத்துவ படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள் தங்களுடைய கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பாக இந்த கட்டண விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அதன்படி முடிவெடுக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய சுயநிதி கல்லூரிகளில் 3,450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.
புதிய கட்டணம் அறிவிப்பு: இந்த இடங்களுக்கான நிகழாண்டுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதி ஆர் பொங்கிப்பன் , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய குழு பல கட்ட ஆய்வு நடத்தி எம்பிபிஎஸ் கல்வி கட்டணங்களை உயர்த்தியுள்ளன.
எவ்வளவு உயர்வு?: இதன்படி சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு 4.35 லட்சம் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து கல்லூரிகளுக்கும் 15 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.5 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்களுக்கு 27 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும். இது கடந்த ஆண்டை விட 2.5 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.
எம்பிபிஎஸ் கல்வி கட்டணம்: தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு 5.40 லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் ஆகும். நிர்வாக இடங்களுக்கு ஆண்டு எம்பிபிஎஸ் கல்வி கட்டணமாக 16.20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் மேம்பாட்டு நிதியாக வசூல் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: சிறப்பு கட்டணம் , கல்வி கட்டணம் ஆகிய அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் ,உணவு கட்டணத்தை தனியாக வசூல் செய்து கொள்ளலாம் என்றும் இதை தவிர கூடுதலாக எந்தவித கட்டணமும் ,நன்கொடையும் பெறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்கள்: வழக்கமாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் இடங்களில் சீட் கிடைத்து அதில் யாரும் சேராமல் இருந்தாலோ அல்லது அந்த இடங்கள் நிரம்பாமல் இருந்தாலும் அவை காலாவதியான சீட்கள் என மாற்றப்பட்டு அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பின்னரும் இந்த இடங்கள் நிரப்பப்பட வில்லை என்றால் அவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணத்தை விட 30% குறைவாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த கட்டணம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications