இனி டாக்டர் படிப்புக்கு கூடுதல் செலவு.. திடீரென எம்பிபிஎஸ் கல்வி கட்டணத்தை உயர்த்திய அரசு..

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வாயிலாகவும் எம்பிபிஎஸ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 11,700 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இதில் 5050 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிடைக்கின்றன. மீதமுள்ள இடங்கள் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நான்கு தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.

எம்பிபிஎஸ் படிப்பு: தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் இடங்களில் 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதமுள்ளவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகின்றன. இது தவிர வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு இடங்களும் இருக்கின்றன. இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் எம்பிபிஎஸ் படிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இனி டாக்டர் படிப்புக்கு கூடுதல் செலவு.. திடீரென எம்பிபிஎஸ் கல்வி கட்டணத்தை உயர்த்திய அரசு..

கட்டணங்கள் உயர்வு: மருத்துவ படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள் தங்களுடைய கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பாக இந்த கட்டண விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அதன்படி முடிவெடுக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய சுயநிதி கல்லூரிகளில் 3,450 இடங்களும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.

புதிய கட்டணம் அறிவிப்பு: இந்த இடங்களுக்கான நிகழாண்டுக்கான கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நீதிபதி ஆர் பொங்கிப்பன் , மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய குழு பல கட்ட ஆய்வு நடத்தி எம்பிபிஎஸ் கல்வி கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

எவ்வளவு உயர்வு?: இதன்படி சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு 4.35 லட்சம் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே போல நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்து கல்லூரிகளுக்கும் 15 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.5 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது. அதே போல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடங்களுக்கு 27 லட்சம் ரூபாய் கல்வி கட்டணமாக செலுத்த வேண்டும். இது கடந்த ஆண்டை விட 2.5 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.

எம்பிபிஎஸ் கல்வி கட்டணம்: தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு 5.40 லட்சம் ரூபாய் கல்வி கட்டணம் ஆகும். நிர்வாக இடங்களுக்கு ஆண்டு எம்பிபிஎஸ் கல்வி கட்டணமாக 16.20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதலாக 60 ஆயிரம் ரூபாய் மேம்பாட்டு நிதியாக வசூல் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: சிறப்பு கட்டணம் , கல்வி கட்டணம் ஆகிய அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் ,உணவு கட்டணத்தை தனியாக வசூல் செய்து கொள்ளலாம் என்றும் இதை தவிர கூடுதலாக எந்தவித கட்டணமும் ,நன்கொடையும் பெறக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்கள்: வழக்கமாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் இடங்களில் சீட் கிடைத்து அதில் யாரும் சேராமல் இருந்தாலோ அல்லது அந்த இடங்கள் நிரம்பாமல் இருந்தாலும் அவை காலாவதியான சீட்கள் என மாற்றப்பட்டு அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு மூன்று கட்ட கலந்தாய்வுக்கு பின்னரும் இந்த இடங்கள் நிரப்பப்பட வில்லை என்றால் அவை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கட்டணத்தை விட 30% குறைவாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025, 2026, 2027 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் இந்த கட்டணம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+