ஒரு வருடத்தில் 365 நாட்கள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் பிடிப்பு இன்றி முழு சம்பளமும் வழங்கப்படும் என நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவன ஊழியர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட கால அளவை விட அதிக விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் சம்பளம் மற்றும் சலுகையுடன் எத்தனை நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என மீஷோ நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீஷோ நிறுவனம்
ஈகாமர்ஸ் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று மீஷோ. இந்த நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக புதிய சம்பள விகிதத்துடன் கூடிய விடுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
365 நாட்கள் விடுமுறை
இந்த திட்டத்தின்படி ஒரு ஊழியர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுக்க முடியும். ஆனால் அந்த ஊழியர் தீவிர நோய் காரணமாக சிகிச்சை பெறுவது அல்லது அவரது குடும்பத்தின் நெருக்கமான உறுப்பினருக்கு தொடர் சிகிச்சை செய்வதோ விடுமுறைக்கான காரணமாக இருக்கவேண்டும்.
முழு சம்பளம்
ஊழியர்கள் தங்களுக்கு தீவிரமான நோய் இருந்தால் அந்த நோய் தீரும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்த விடுமுறை காலத்தில் அவருக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊழியர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தீவிர நோய் இருந்தால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஊதியத்தில் 25 சதவீதத்தை மூன்று மாதங்களுக்கு பெற முடியும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காப்பீடு - பிஎஃப் சேமிப்பு
அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கான காப்பீடு, பிஎஃப் சேமிப்பு உள்பட கூடுதல் வசதிகளையும் மீஷோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதியத்துடன் விடுமுறை திட்டம்
எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு இலக்கை வைத்து எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பணி செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நாங்கள் தரும் ஒரு சின்ன திட்டம் தான் இந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறை என மீஷோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
உடல் நலன் முக்கியம்
ஆனால் அதே நேரத்தில் மருத்துவம் அல்லாத காரணங்களுக்கு இந்த விடுமுறை திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தேவையான ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் விடுமுறை எடுத்தால் சம்பளம் போய்விடுமோ என்று அச்சம் காரணமாக தங்களது உடல் நலத்தை சரியாக கவனிக்காமல் இருக்கும் ஊழியர்களுக்கு இது ஒரு நல்ல திட்டம் என்றும் மீஷோ தெரிவித்துள்ளது.
யூனிகார்ன் அந்தஸ்து
மீஷோ நிறுவனத்தில் தற்போது 2,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும் இந்த நிறுவனம் சமீபத்தில் 300 மில்லியன் டாலர் திரட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications