சாப்ட் பேங்க் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான மீஷோ, அதன் மளிகை வணிக பிரிவில் இருந்து 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட்-க்கு இணையாக மீஷோ மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ள ஒரு ஷாப்பிங் ஆப் ஆகும்.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக இருந்த மீஷோ இன்று, மீஷோ சூப்பர் ஸ்டோராகவும் உருவெடுத்துள்ளது.
ஏன் அதிரடி நடவடிக்கை?
இதில் மளிகை பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் ஷாப்பிங் செய்யும் வகையில் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தான் மீஷோ சூப்பர் ஸ்டோர் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. மீஷோவின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு மத்தியில் தான், மீஷோ இப்படி ஒரு அதிரடியான பணி நீக்க நடவடிக்கையினையும் எடுத்துள்ளது.
உதவிகள்
எனினும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உதவிகளை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் நிதியுதவி பெறப்பட்ட பிறகு, மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்கமும் வந்துள்ளது.
பாதிப்பு இருக்காது
மீஷோவின் இந்த மறுசீரமைப்பு திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக, மீஷோ நிறுவனத்திற்கு வெளியே புதிய வாய்ப்புகளை பெறவும் உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது. எனினும் மீஷோவின் இந்த நடவடிக்கையானது வணிகத்தில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது.
12 மாநிலங்களில் சேவை
அதன் மளிகை வணிகத்தினை பொறுத்தவரையில் மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களுக்கு சேவை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. இதற்கிடையில் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் 12 மாநிலங்களிலும் சேவை கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
என்ன வசதி?
மீஷோவின் இந்த புதிய ஒருங்கிணைப்பு மூலம், மீஷோவில் உள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், 36க்கும் மேற்பட்ட வகைகளில் அடங்கிய 8.7 கோடிக்கும் அதிகமான பொருட்களை இந்த ஒரே ஆப்பின் மூலம் வாங்க முடியும். இதுகுறித்து மீஷோ நிறுவனரும் முதன்மை செயல் அதிகாரியுமான விதித் ஆத்ரே, டயர் 2 நகரங்களில் உள்ள மக்களின் தேவைக்கேற்ப, இந்த ஆன்லைன் ஷாப்பிங் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக எங்களது பிரதான ஆப்புடன், மீஷோ சூப்பர் ஸ்டோர் ஆப்பினை இணைத்து உருவாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications