இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. இந்திய மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதத்தினர் ஆதார் கார்டை வைத்துள்ளனர். வங்கிகளில் கணக்கு திறப்பது முதல் அரசாங்க சலுகைகளைப் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இந்தியாவில் உள்ள ஓட்டு மொத்த மக்களின் டேட்டாக்களையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக ஆதார் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்துதான் பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் UIDAI மக்களுக்குப் பயன்பெறும் வகையில் ஆதார் கார்டு சாட்போட்டான மித்ராவை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டு பயனர்களுக்கு மற்றொரு புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. அதுதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆதார் சாட்போட் மித்ரா. இந்த ஆதார் மித்ரா மக்களின் பல்வேறு பணிகளை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மக்கள் சில சேவைகளை பெற அலைந்து திரிய வேண்டியதில்லை. அனைத்து வேலைகளும் ஆதார் மித்ராவால் எளிதில் செய்யப்படும்.

ஆதார் மித்ராவை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் தங்கள் ஆதார் கார்டின் நிலையை கண்காணிக்கலாம். உங்கள் ஆதாரின் நிலையை, உங்கள் EID, SRN அல்லது URN ஆகியவற்றை சாட்போட்டில் பதிவிட்டு சரிபார்க்கலாம். அதோடு டிஜிட்டல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்யலாம். செல்லும் இடங்களுக்கு எல்லாம் ஆதார் கார்டை எடுத்துச் செல்வதற்கு பதிலாக இதுபோன்ற டிஜிட்டல் வடிவில் ஆதார் கார்டை வைத்திருப்பது பெருமளவில் சிக்கல்களை தவிர்க்கும்.
தேவைப்பட்டால் அருகில் இருக்கும் ஆதார் பதிவு மையங்களையும் கண்டறியலாம். ஆதார் அட்டை தொலைந்து விட்டால் அதைப் பற்றி புகார் அளிக்கலாம், ஆனால் இந்த ஆதார் மித்ராவை பயன்படுத்தி எந்த ஒரு தகவல்களையும் நீங்கள் அப்டேட் செய்ய முடியாது.
ஆனால் பயனர்கள் தங்களுடைய முகவரி விவரங்கள், மொபைல் நம்பர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை myAadhaar போர்ட்டலில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். ஆதார் விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க UIDAI பரிந்துரைக்கிறது. சிலர் தங்களுடைய வீட்டு முகவரியை மாற்றி இருப்பார்கள், சிலர் நம்பர் மாற்றி இருப்பார்கள் இதுபோன்ற நபர்களும் தங்களுடைய விவரங்களை துல்லியமாக ஆதார் கார்டில் வைத்திருப்பது அவசியம். 2025-ஆம் ஆண்டின் ஜூன் 14-ஆம் தேதி வரையில் ஆதார் கார்டு விரவாரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள அரசு காலக்கெடு வழங்கியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications