உண்மையிலேயே இவங்களுக்கு பெரிய மனசு தான்.. அம்பானி அதானி கூட இப்படி செய்யலையே..!!

பெரிய நிறுவனங்களை நிறுவி, அதன் வளர்ச்சியில் மட்டும் பங்களிக்காமல் சமூக நலனுக்காகவும் பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். அப்படி இந்த ஆண்டு மட்டும் பல லட்சம் கோடியை நன்கொடையாக ஒரு ஜோடி வழங்கியுள்ளனர். மைண்ட்ரி நிறுவனத்தின் தலைவர் சுஷ்மிதா மற்றும் சுப்ரோடோ பாக்ச்சி தம்பதியர் ரூ. 179 கோடி நன்கொடை அளித்து, 2024-ஆம் ஆண்டின் ஹுரூன் இந்தியா நன்கொடையாளர் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுஷ்மிதா மற்றும் சுப்ரோடா பாக்சி இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான நன்கொடையை வழங்கி வருகின்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்வதற்கு அப்பால் அவர்களுடைய பெருந்தன்மைக்காக அறியப்பட்டவர்கள். 2022-ஆம் ஆண்டில் ரூ.213 கோடியும், 2023-ஆம் ஆண்டில் ரூ.110 கோடியும் சுகாதார சேவைகளுக்காக இந்த தம்பதியினர் வழங்கியுள்ளனர். அவர்களின் தொண்டு முயற்சிகள் சமீபத்தில் வெளியான ஹுரூன் இந்தியா நன்கொடையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 உண்மையிலேயே இவங்களுக்கு பெரிய மனசு தான்.. அம்பானி அதானி கூட இப்படி செய்யலையே..!!

சில தினங்களுக்கு முன்பு ஹுரூன் இந்தியா நிறுவனம், இந்தியாவில் உள்ள மிகவும் தாராளமான நபர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி போன்ற நன்கு அறியப்பட்ட மில்லியனர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். அதிக அளவில் நன்கொடை வழங்கி வந்தாலும் சுஷ்மிதா மற்றும் சுப்ரோடா பாக்சி ஜோடி அதிகம் அறியப்படவில்லை.

ஆனால் அதிக அளவிலான நன்கொடை வழங்கிய தாராள உள்ளங்களில் இவர்களும் பங்காற்றியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ரூ.179 கோடி நன்கொடை வழங்கி ஒன்பதாவது இடத்தில் இந்த தம்பதியினர் இருக்கின்றனர்.

மருத்துவச் செலவுக்கு கஷ்டப்படும் நபர்களுக்காக வருடா வருடம் நன்கொடை வழங்கி வருகின்றனர். தங்கள் தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாக பாக்சி ஜோடி 2022-ஆம் ஆண்டில் ரூ.213 கோடியும், 2023-ஆம் ஆண்டில் ரூ.110 கோடியும், 2024-ஆம் ஆண்டில் ரூ.179 கோடியும் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அதோடு ஒடிசாவில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.340 கோடி நன்கொடை அளிப்பதாக 2021-ஆம் ஆண்டில் அறிவித்தனர்.

மைண்ட்ட்ரீ நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் ஐடி தொழிநுட்ப சேவையை வழங்கி வருகிறது. மைண்ட்ட்ரீ நிறுவனம் சுஷ்மிதா மற்றும் சுப்ரோட பாக்சி ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் பல்வேறு நாவல்களை சுஷ்மிதா எழுதியுள்ளார் இவர் ஒரு ஒடியா எழுத்தாளர். சுஷ்மிதா மற்றும் சுப்ரோட இருவரும் மைண்ட்ட்ரீ-யை உருவாக்குவதற்கு முன்பு சமூக மாற்றங்களில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.56,643 கோடி. இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு சமூக மாற்றங்களில் ஈடுபட்டு வந்த இந்த ஜோடி, நிறுவனம் வளர்ந்த பின்னரும் அதை தொடர்கிறது. இந்த ஜோடியை பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+