சாதிக்க படிப்பு ஒரு தடை இல்லை என்பதை பலர் நிரூபித்து காட்டியுள்ளனர். அப்படித்தான் கேரளாவை சேர்ந்த ஒருவர் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இன்று சுமார் ரூ.48,000 கோடி சொத்துக்கு உரிமையாளராக மாறியிருக்கிறார். சிறு வயதில் அவர் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை. ஆனால் இன்றோ மிகப்பெரிய நகை பிராண்டின் உரிமையாளராக வலம் வருகிறார். யார் அவர்?
1956-ஆம் ஆண்டில் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு பெரிய வணிகக் குடும்பத்தில் பிறந்தவர் ஜாய் ஆலுக்காஸ். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 15 பேர். அதில் 11-ஆவதாக பிறந்தவர் இவர். ஜாய் பிறந்த அதே வருடமான 1956-ஆம் ஆண்டில் அவருடைய தந்தை ஆலுக்கா ஜோசப் வர்கீஸ் திருச்சூரில் முதன்முறையாக ஒரு நகைக்கடையை தொடங்கினார்.

கடை மட்டுமின்றி ஜவுளி வியாபாரம், குடை தயாரிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் என பல தொழில்களில் ஆலுக்காஸ் குடும்பம் ஈடுபட்டு வந்தது. 1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து தங்களுடைய கடையை கோழிகோடுக்கு விரிவுபடுத்தினர். அந்த சமயத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நகைக்கடைக்கு புதுப்புது வாடிக்கையாளர்கள் கிடைக்கத் தொடங்கினர்.
தங்களுக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு மேற்காசியா பகுதியில் வணிகத்தை விரிவுபடுத்த ஆலுக்காஸ் குடும்பம் முடிவு செய்தது. இறுதியில் 1988-ஆம் ஆண்டில் அபுதாபியில் முதல் கடையை திறந்தனர். ஜாய் ஆலுக்காஸ் இன் தந்தை மலையாளி என்பதால் அங்கு அவருக்கு மலையாளி வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கினர். இதனால் வியாபாரம் இன்னும் வேகமெடுக்க தொடங்கியது.
தந்தைக்கு உதவிய ஜாய் ஆலுக்காஸ்: பாரம்பரியமாக நகை விற்பனை செய்யும் முறையை மாற்றியமைக்க நினைத்த ஜாய் ஆலுக்காஸ் சாப்ட்வேர் மற்றும் முறையான தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்தார்.
ஊழியர்களுக்கு யூனிபார்ம் மற்றும் அடிக்கடி வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் என தங்களுடைய பிராண்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல முயற்சிகளை மேற்கொண்டார். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகரிக்கவே கடையில் அமர்ந்து வியாபாரம் செய்ததை விட்டு தொழிலை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
ஜாய் ஆலுக்காஸ் பிராண்ட்-இன் தொடக்கம்: 2000-ஆம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் நகை வியாபாரத்தைத் தாமே ஏற்றுக்கொண்டு நடத்த தொடங்கினார். 2005-ஆம் ஆண்டில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுக்கும் வணிகத்தை விரிவாக்கம் செய்தார்.
பொதுவாக ஒரு கடை பிற ஊர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்போது.. பிரான்சைஸ் வழங்குவார்கள். ஆனால் ஜாய் ஆலுக்காஸ் அதை விரும்பவில்லை. பிரான்சைஸ் தருவதற்கு பதிலாக எல்லா கடைகளையும் நேரடியாக நடத்த முடிவு செய்தார். இன்று இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. அமெரிக்கா, லண்டன், சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சிங்கப்பூர், மலேசியா என வெளிநாடுகளில் மட்டும் சுமார் 60 கடைகளை நடத்தி வருகிறார்.
2025 -ஆம் ஆண்டில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1290.77 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ஜா ய் ஆலுக்காஸ்-இன் நிகர மதிப்பு 5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ.47,672 கொடியாகும்.


Click it and Unblock the Notifications
