இந்தியாவுக்கு முகேஷ் அம்பானினா.. பாகிஸ்தானுக்கு மியான் முகமது மான்சா…!

பாகிஸ்தான்: இந்தியாவில் பணக்கார குடும்பம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது அம்பானி குடும்பம் தான். அந்த வகையில் பாகிஸ்தானிலும் பல்வேறு தொழில்களில் கால் பதித்து மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் ஒருவர்.

பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலையற்ற தன்மை என நமது அண்டை நாடான பாகிஸ்தான் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார நிலைமை என்பது மிக மோசமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலிலும் ஒருவரது சொத்து மதிப்பு மட்டும் குறையாமலேயே இருக்கிறது அவர் தான் மியான் முகமது மான்சா..

இந்தியாவுக்கு முகேஷ் அம்பானினா.. பாகிஸ்தானுக்கு மியான் முகமது மான்சா…!

பாகிஸ்தான் மக்களுக்கு பணக்காரர் குழுமம் என்ற உடன் நினைவுக்கு வருபவர் மியான் முகமது மான்சா. பாகிஸ்தானின் முதல் பெரும் பணக்காரர் இவர். மியான் முகமது மான்சா 1941 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சினியட் பகுதியில் பிறந்தவர்.

இவர்களது குடும்பம் பாரம்பரியமாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்தது. மியான் முகமது இதனை பெரிய குழுமமாக மாற்றி பலதுறைகளில் வெற்றி கண்டு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார்.
நிஷாத் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் மியான் முகமது மான்சா. இவரது தற்போதைய சொத்து மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிய வருகிறது.

லண்டனில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னாளில் பாகிஸ்தான் திரும்பினார். தந்தைக்கு சொந்தமான காட்டன் மில்லை எடுத்து நடத்த தொடங்கினார்.

நிஷாத் டெக்ஸ்டைல்ஸ் மில் என பெயர் மாற்றி பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆடை நிறுவனமாக உருவாக்கினார். இதனை அடுத்து பல்வேறு துறைகளில் கால் பதிக்க தொடங்கினார். சிமெண்ட், மின்சாரம், வங்கி மற்றும் காப்பீடு துறைகளில் இவர் முதலீடு செய்து 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.

2010 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இவர் 937 வது இடத்தை பிடித்தார். இவர் மலேசியா மேபேங்க் என்ற வங்கியை 2008 ஆம் ஆண்டு நிறுவினார்.

பாகிஸ்தானை பொறுத்தவரை இவரும், இவரது குடும்பமும் தான் அதிக அளவில் அரசுக்கு வருமான வரி செலுத்துபவர்கள். இவர் வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்துள்ளார். இவரது மூதாதையர்கள் இந்தியாவில் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பே இவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாபிற்கு அங்கே ஆலைகளை நிறுவியுள்ளனர். மியான் முகமது மான்சா பாகிஸ்தானின் பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக அறக்கட்டளைகள் மூலம் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+