இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடி பெயர்ந்து தற்போது 8000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார் ஒரு பெண். 1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது மத ரீதியான பல்வேறு கலவரங்களும், வன்முறைகளும் நடைபெற்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்த பலரும் இந்தியாவில் குடி பெயர்ந்தனர்.
ஆனால் இந்த பயணம் அத்தனை எளிதாக இருக்கவில்லை. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடி பெயர்ந்தவர்தான் சரளா அகுஜா. பாகிஸ்தானின் சிந்து தான் இவரது பூர்வீகம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவருக்கு 10 வயது.

தன்னுடைய பூர்வீகத்தை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.தன்னுடைய 10 வயதில் பாகிஸ்தானில் இருந்து அவர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் . குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதில் இருந்தே இவர் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலைக்கு சென்றார்.
பல்வேறு தொழிற்சாலைகளில் சென்று இவர் பணி புரிந்தார். 16 வயதில் இவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு சிறு வயதிலேயே பல்வேறு சவால்களை சந்தித்த அவர் இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக பணத்தை சேமித்து வைத்து 1974 ஆம் ஆண்டு 5 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
ஆரம்ப கட்டத்தில் ஒரு பெண்ணாக தொழிலை தொடங்கி நடத்துவது இவருக்கு பல சவால்களை கொண்டு வந்தது. அந்த சவால்களை இவர் மனம் தளராமல் கடந்து வந்தார். இவரது நிறுவனம் விரிவடையத் தொடங்கி அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கெல்லாம் ஆடைகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.
தங்கள் குடியிருப்புகளை சுற்றி இருந்த வீடுகளுக்கு எல்லாம் சென்று அங்கே வறுமை நிலையில் இருந்த பெண்களை சந்தித்து பேசி அவர்களை எல்லாம் தன்னுடைய ஆலையில் பணிக்கு சேர்த்தார். பின்னர் இவரது பிள்ளைகள் வளர்ந்து ஆளாகினர். 1990களில் இவரது மகன்களான ஹரிஷ் மற்றும் சுனில் ஆகிய இருவரும் தொழிலில் பங்கேற்ற தொடங்கினர். இதன் மூலம் இவர்களது நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக உருவானது.
தற்போது இந்த நிறுவனம் 8 மாநிலங்களில் 50 ஆடை உற்பத்தி ஆலைகளை கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2023 ஆம் ஆண்டு 8244 கோடி என அதிகரித்துள்ளது. GAP, H&M, Zara, Walmart உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எல்லாம் இந்த நிறுவனம் துணிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications