இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் டாடா குழுமம் 100க்கும் அதிகமான நிறுவனங்களுடன் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் நிலையில் கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் அடுத்தத் தலைமுறைக்கு அதிகாரத்தை வழங்குவது குறித்து முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.
ஒருபக்கம் டாடா குழும நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிர்வாகப் பதவி டாடா குடும்ப உறுப்பினருக்கு வெளியில் சென்ற நிலையில், டாடா டிரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகம் தொடர்ந்து டாடா குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் டாடா டிர்ஸ்ட் அமைப்பில் புதிய டிரஸ்டியாக ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
டாடா குழுமம்
டாடா குழுமத்தில் டாடா குடும்பத்தைத் தாண்டி அதிகப் பங்குகளை வைத்திருப்பது மிஸ்திரி குடும்பம் தான் என அனைவருக்கும் தெரியும். மிஸ்திரி குடும்பம் டாடா குழும நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 18.4 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
பலோன்ஜி மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி
இந்நிலையில் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவரும், நாட்டின் முக்கியப் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவரான பலோன்ஜி மிஸ்திரி தனது மும்பை வீட்டில் 93வது வயதில் ஜூன் 28 ஆம் தேதி மறைந்தார். இதைத் தொடர்ந்து வெறும் 3 மாதத்திற்குள் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் செப்டம்பர் 4, 2022ல் உயிரிழந்தார்.
மெஹ்லி மிஸ்திரி
மிஸ்திரி குடும்பத்தில் இரு முக்கியமான நபர்களும் மறைந்த நிலையில் டாடா டிரஸ்ட் தனது நிர்வாகத்தைப் பலப்படுத்த 62 வயதான மெஹ்லி மிஸ்திரி-ஐ சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் அமைப்புகளில் டிரஸ்டியாகச் சேர்த்துள்ளது.
டாடா டிரஸ்ட் சிஇஓ
டாடா டிரஸ்ட் அமைப்பு 2020ல் முதல் முறையாகச் சிஇஓ பதவியில் ஸ்ரீநாத் நரசிம்மன் நியமிக்கப்பட்டார், இவர் ஓய்வு பெறுவதாக அறக்கட்டளை அறிவித்த நிலையில் புதிதாக மெஹ்லி மிஸ்திரி டிரஸ்டி குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதேபோல் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரிக்கான தேடல் குழுமத்திற்குள் மற்றும் வெளியில் நடந்து வருகிறது.
யார் இந்த மெஹ்லி மிஸ்திரி..?
பிரிட்டன் நாட்டவரும், ரத்தன் டாடா-வின் நம்பிக்கைக்கு உரியவருமான மெஹ்லி மிஸ்திரி, டாடா டிரஸ்ட் அமைப்பில் சேருவார் என்ற கணிப்புகள் இருந்தது. மெஹ்லி மிஸ்திரி-யின் தாயாரும், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் தாயாரும் சகோதரிகள். மெஹ்லி மிஸ்திரி மற்றும் சைரஸ் மிஸ்திரி ஒரு குடும்பமாக இருந்தாலும் நெருங்கியவர் இல்லை.
மெஹர்ஜி பல்லோன்ஜி குழுமம்
மெஹ்லி மிஸ்திரி பிரிட்டன் நாட்டில் மெஹர்ஜி பல்லோன்ஜி குழுமம் பெயரில் 12க்கும் அதிகமான நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகிறார். இந்தியாவில் இருக்கும் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமம் தனி, மெஹர்ஜி பலோன்ஜி குழுமம் தனி.
டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்
டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு தனது நிர்வாக முறையில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதாவது ஓரே நபர் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரர் நிறுவனமான டாடா டிரஸ்ட்-க்கு தலைவராக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் அமைப்பின் ஆர்டிகிள் 118 இன் திருத்தம் செய்யப்பட உள்ளது.
ரத்தன் டாடா
இதன் மூலம் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட் ஆகிய இரு அமைப்புக்கும் தலைவராக இருந்த கடைசி நபர் ரத்தன் டாடா. இதன் மூலம் சந்திரசேகரன் டாடா டிரஸ்ட் அமைப்புக்குள் வர முடியாது. இதன் மூலம் டாடா டிரஸ்ட்-ல் தொடர்ந்து டாடா குடும்பம் ஆதிக்கம் செலுத்தும்.
டாடா சன்ஸ்
டாடா குழுமத்தில் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனம். டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகளை டாடா டிரஸ்ட்ஸ் வைத்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications