உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தனது காதல் மனைவியான மெலிண்டா கேட்ஸ்-ஐ 27 வருடத்திற்குப் பின்பு விவாகரத்துச் செய்ய முடிவு செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
இவர்களின் விவாகரத்துக்குப் பின் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பெரிய அளவில் வெளியுலகத்திற்கு வராத நிலையில் மெலிண்டா தனது விவாகரத்து குறித்தும், விவாகரத்துக்குக் காரணத்தையும் CBS பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா விவாகரத்து அறிவித்த நாளில் இருந்து அவர்களைச் சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு முக்கியமான கேள்வி விவாகரத்துக்கு என்ன காரணம் என்பது தான். இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் பில்கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருப்பது மட்டும் அல்லாமல், 27 வருட திருமண வாழ்க்கையில் இருந்து 66 வயதில் விவாகரத்து பெற வேண்டிய கட்டாயம் என்ன என்பது தான்.
கள்ளத்தொடர்பு
இந்நிலையில் இந்தக் கேள்விக்குத் தற்போது மெலிண்டா தடாலாடியாகப் பதில் அளித்துள்ளார். CBS This Morning என்ற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் உடன் 20 வருடத்திற்கு முன்பு கள்ள தொடர்பு இருந்தது அவர் ஒப்புக்கொண்டது மட்டும் அல்லாமல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விசாரணையும் உறுதி செய்யப்பட்டது.
பில் கேட்ஸ்
இந்நிலையில் இந்தப் பேட்டியில் பில் கேட்ஸ் ஒன்றுக்கும் அதிகமான முறை திருமணமான பின்பு கள்ள தொடர்பில் இருந்தாரா என்ற கேள்வி கேட்டபோது. மெலிண்டா சில நிமிடம் மௌனம் காத்து மிகவும் யோசித்து, இதற்குப் பில் கேட்ஸ் தான் உண்மையான பதிலை சொல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
பில் கேட்ஸ் - ஜெஃப்ரி எப்ஸ்டீன்
இதன் மூலம் பில் கேட்ஸ் மெலிண்டா-வை திருமணம் செய்த பின்பு ஒன்றுக்கும் அதிகமான முறை பலருடன் கள்ள தொடர்பில் இருந்துள்ளது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இதேபோல் பில் கேட்ஸ் - ஜெஃப்ரி எப்ஸ்டீன் மத்தியிலான நட்பு மெலிண்டா-வை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த டெக் உலகையும் அதிர வைத்தது.