இந்திய சாலைகளும், கார்களும் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் நிலையில் சாலையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. டிராபிக் அதிகமாக இருக்கும் போது எவ்வளவு வேமகாகச் செல்ல கூடிய காராக இருந்தாலும் வேஸ்ட் தான்.
இப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது புனேவில் நடந்துள்ளது. அதுவும் யாருக்கு நடந்துள்ளது என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.
மெர்சிடீஸ் பென்ஸ்
புனே நகரத்தின் பிசியான சாலையில் மெர்சடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ-வின் எஸ் கிளாஸ் கார் டிராபிக் ஜாம்-ல் சிக்கியுள்ளது. இதில் பொறுமை இழந்த மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ செய்த காரியம் தான் தரமான சம்பவம்.
சிஇஓ Martin Schwenk
மெர்சடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ Martin Schwenk டிராபிக்-ல் சிக்கியதால், நீண்ட நேரம் எந்தப் பக்கமும் செல்ல முடியாமல் ஓரே இடத்தில் மாட்டிக்கொண்டு உள்ளது. வெகு நேரம் காத்திருந்து கடுப்பான Martin Schwenk காரை விட்டு வெளியேறினார்.
ஆட்டோ
இதன் பின்பு ஒரு கிலோமீட்டர் வரையில் நடந்த Martin Schwenk அதன் பின்பு காலியாக இருந்த சாலையில் ஆட்டோ பிடித்துச் சென்றுள்ளார். இதை Martin Schwenk தனது இன்ஸ்டாகிராம் தளத்திலும் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு தான் தற்போது இணையத்தில் வைராலாகியுள்ளது.
ஆட்டோ ரிக்ஷா
இந்த நிகழ்வு குறித்து Martin Schwenk தனது இன்ஸ்டா பதிவில் அற்புதமான புனே சாலைகளில் உங்கள் S-கிளாஸ் கார் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டால் - நீங்கள் என்ன செய்வீர்கள்? காரில் இருந்து இறங்கி, சில கி.மீ தூரம் நடக்க ஆரம்பித்து, பிறகு ஆட்டோ ரிக்ஷாவைப் பிடிக்கலாமா? என்று பதிவிட்டு உள்ளார்.
கஜினி படம்
Martin Schwenk பதிவுக்குச் சுமார் 1000த்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளது மட்டும் அல்லாமல் பலர் கமெண்ட் செய்துள்ளனர். இதில் சிலர் ஆட்டோவில் சென்ற அனுபவம் எப்படி இருந்தது என்றும், இந்த நிகழ்வு கஜினி படத்தில் ஒரு காட்சியை நினைவுக்கு வருகிறது எனக் கமெண்ட் செய்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications