2025 ஆம் ஆண்டில் கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. 2025 ஆம் ஆண்டு டெக் நிறுவன ஊழியர்களுக்கு மோசமான ஆண்டு எனக் கூறலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் வரை பணியிழந்தார்கள். இது அதிகாரப்பூர்வமாக வெளியான எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய பணியை இழந்தார்கள்.
2026 ஆம் ஆண்டு தொடங்கி 13 நாட்கள் தான் ஆகியிருக்கிறது ஆனால் அதற்குள்ளாக மூன்று பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தங்களுடைய நிறுவனத்தில் ரியாலிட்டி லேப் செக்டர் பிரிவில் வேலை செய்து வரும் 10 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்றும் அதற்கு மாறாக அந்த பணத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் மெட்டா நிறுவனம் அறிவித்திருப்பதாக ப்ளூம்பெர்க் செய்தி குறிப்பிடுகிறது. மெடா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்திலும் ஏஐ இணைக்கப்பட்ட அணியக்கூடிய உபகரணங்களிலும் அதிக கவனம் செலுத்துவதால் மற்ற துறைகளில் ஆட்களை குறைத்து விட்டு அந்த பட்ஜெட்டை இதற்காக ஒதுக்கீடு செய்து வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய வங்கி நிறுவனமான சிட்டி குரூப் தங்களுடைய ஊழியர்களில் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது. சிட்டி குரூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜேன் பிரேசர் நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் நோக்கில் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.
2026 ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வோம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிறுவனம் அறிவித்திருந்தது . அதனை இந்த ஆண்டு தொடர போவதாக தெரிவித்து இருக்கிறது.அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீடு நிறுவனமான ப்ளாக் ராக் தங்கள் ஊழியர்களில் நூற்றுக்கணக்கானவர்களை பணியில் இருந்து நீக்குவதாக தெரிவித்து இருக்கிறது. ஊழியர்களில் ஒரு சதவீதம் பேர் இந்த முறை பணிநீக்கம் செய்யப்பட இருக்கின்றனர். முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் 22,000 பேரை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இது போலியான தகவல் என மைக்ரோசாப்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏஐ தொழில்நுட்பம் எனும் கத்தி தொடர்ந்து ஐடி ஊழியர்களின் தலையில் தான் தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் டெக் வேலைகளே பாதுகாப்பற்றவையாக மாறி வருகின்றன. ஊழியர்கள் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன்களை வளர்த்து கொள்வது கட்டாயமாகியுள்ளது. அது தவிர ஏஐ தொழில்நுட்பங்களை சக ஊழியராக பாவிக்க வேண்டிய சூழலும் உண்டாகி இருக்கிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications