META நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்க அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, முதல் சுற்று பணிநீக்கம் போல் அல்லாமல் 2வது சுற்றில் முக்கிய மாற்றத்துடன் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் மார்ச் மாதமே அனைத்து உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடுமையான விதிமுறைகளை விடுத்து கடுமையாக பணியாற்ற விருப்பம் இருந்தால் மட்டுமே இருக்கவும், இல்லையெனில் வெளியேறலாம் என நேரடியாக தெரிவித்தார். இந்த நிலையில் ஏப்ரல் மாத துவக்கம் முதல் 2வது சுற்று பணிநீக்கம் குறித்து தகவல் வெளிவந்தாலும் இதுவரையில் எவ்விதமான அறிவிப்பும் யாருக்கும் வரவில்லை என இந்திய மெட்டா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவரான Lori Goler செவ்வாய்க்கிழமை டெக்னிக்கல் டீம்-ல் யாரெல்லாம் பணிநீக்கம் செய்யப்படுகிறார்களோ அவர்களுக்கு ஈமெயில் மூலம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டும் என மெட்டா ஊழியர்களுக்கு அனுப்பிய MEMO-வில் குறிப்பிட்டு உள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பொதுவாக மாஸ் பணிநீக்க அறிவிப்புகள் அனைத்தும் விடியர்காலையில் தான் நிர்வாகம் ஊழியர்களுக்கு அனுப்பும், அந்த வகையில் 2வது சுற்றில் பணிநீக்கம் செய்யப்படும் 4000 ஊழியர்களுக்கான அறிவிப்பு அமெரிக்க நேரப்படி காலை 3- 5 மணிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்டா ஊழியர்கள் கூறுகின்றனர். புதன்கிழமை இல்லாவிட்டால் இந்த வார இறுதிக்குள் கட்டாயம் பணிநீக்கம் அறிவிப்புகள் வெளியாகும்.
மெட்டா நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்கத்தில் 2 விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒன்று மெட்டா நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவரான Lori Goler தனது MEMO-வில் குறிப்பிட்டது போல் டெக்னிக்கல் டீம், மற்றொரு விஷயம் சமுக வலைத்தளத்தில் பேசுவது போல் கீழ் மட்ட ஊழியர்கள் அதாவது துவக்க நிலை ஊழியர்கள் இந்த சுற்றில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவில் META நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என அனைத்து முக்கிய சேவைகளும் இருப்பது மட்டும் அல்லாமல் மெட்டாவின் பெரிய டெக் டீம் இந்தியாவில் உள்ளது. டிசம்பர் 2022 முடிவில் மெட்டாவில் 86,482 ஊழியர்கள் இருந்துள்ளனர், இந்தியா பெரிய சந்தை என்பதாலும், டெக் அணி பெரியதாக இருக்கும் காரணத்தால் குறைந்தது 5- 10 சதவீத ஊழியர்கள் இந்தியாவில் இருக்கலாம்.

மெட்டா ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற முன்னணி கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளை நேரடியாக பணியில் சேர்த்து வரும் வேளையில், இளம் டெக் வல்லுனர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 2வது பணிநீக்க சுற்றில் இந்தியா ஊழியர்கள் அதிகம் பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. இதேநேரத்தில் இந்தியாவில் புதிய தலைவர் வந்துள்ளதால் அதிக பணிநீக்கத்திற்கு வாய்ப்பு அதிகம்.
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா கடந்த சில வருடங்களாகவே கடுமையான போட்டி காரணமாகவும், சில தவறான முடிவுகள் காரணமாகவும் வர்த்தகம், வருவாயை இழந்து வருகிறது. இதற்கிடையில் சர்வதேச பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் மெட்டா மொத்தமாக முடங்கியது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications