பேஸ்புக்-இன் தாய் நிறுவனமான Meta, தனது முக்கிய சமுக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் Threads இல் அரசியல் தொடர்பான கன்டென்ட்-களை காட்டுவது தொடர்பான கொள்கை மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகள் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்கொள்ள உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசியல் தலைவர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சமுக வலைத்தளம் முக்கிய பிரச்சார கருவியாக விளங்குகிறது.

இந்த முக்கியமான சூழ்நிலையில் இன்ஸ்டாகிராம் மற்றும் Threads இல் அரசியல் தொடர்பான கன்டென்ட்-களை காட்டுவது தொடர்பான கொள்கை மாற்றத்தை மெட்டா நிர்வாகம் அறிவித்துள்ளது, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி வெள்ளிக்கிழமை பதிவிட்ட த்ரெட்ஸ் பதிவின் மூலம் வெளியிட்ட அறிக்கையில், நிறுவனம், இனி எப்போதும் போல் பயனர்களுக்கு அரசியல் தொடர்புகளான தரவுகளைத் தீவிரமாக விளம்பரப்படுத்தாது என்று அந்த பதிவின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் Threads பயனர்கள் அவர்கள் பின்தொடரும் கணக்குகளில் இருந்து அரசியல் தொடர்பான பதிவுகள் வந்தாலும், அத்தகைய உள்ளடக்கத்தைக் காட்டுவதை நிறுத்திவிடும் என்று மொசெரி தெளிவுபடுத்தினார்.
இது அடுத்த சில வாரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது, இதன் மூலம் மெட்டாவின் அல்காரிதம் கன்டென்ட் பரிந்துரைக்கும் முறை பப்ளிக் கணக்குகளுக்குப் பாதிக்கும்.
குறிப்பாக, இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ் மற்றும் எக்ஸ்ப்ளோர், த்ரெட்களில் பரிந்துரைக்கும் முறை கடுமையாகப் பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்த கட்டுப்பாட்டைத் தாண்டி ஒரு பயனர் அரசியல் தொடர்பான தகவல்களை பார்க்க விரும்பினால் அவர்களுக்கு ஒரு வழியை கொடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் Threads பயனர் கன்டென்ட் டேப்-க்கு சென்று, அரசியல் கன்டென்ட்-களை தேர்வு செய்து, அங்கு Don't Limit அல்லது Limit ஆகியவற்றைத் தேர்வு செய்துகொள்ள முடியும் என தெரிவித்தார். இந்த முறை பேஸ்புக்கிலும் விரைவில் வரும் என தெரிகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற முக்கியமான சமுக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா-வின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் இந்த ஒரு விஷயம் தாழ். மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை பிப்ரவரி 2 ஆம் தேதி தடாலடியாக 22 சதவீதம் வரையில் உயர்ந்தது மூலம் இவருடைய சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது.
மார்க் ஜுக்கர்பெர்க் சொத்து மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் சுமார் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து அவருடைய மொத்த சொத்து மதிப்பு தற்போது 168 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகின் 4வது பெரும் பணக்காரராக இருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் ஹூவாய் பகுதியில் இருக்கும் கவாய் தீவில் 2014 ஆம் ஆண்டு முதல் மார்க் ஜூக்கர்பெர்க் பல கட்டங்களாகச் சுமார் 1400 ஏக்கர் நிலத்தை வாங்கித் தற்போது பெரிய வீடு, பங்கர், காம்போட் சுவர்களைக் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
மார்க் ஜுக்கர்பெர்க் தற்போது ஹவாயில் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பில் 1400 ஏக்கர் நிலத்திற்குச் சுற்றுச்சுவர் கட்டவும், ஒரு நிலத்தடி பதுங்கு கட்டமைப்பு (BUNKER), இந்தப் பங்கரில் உணவு மற்றும் எனர்ஜி ஆதாரங்கள் உடனும் கட்டமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications