இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், மெட்டா ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, வரும் 2030ம் ஆண்டுக்குள் ஐந்து கண்டங்களை இணைக்கும் வகையில், கடலுக்கடியில் 50,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு கேபிள் பதிக்கும் திட்டத்தை மெட்டா நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில், தமிழ்நாடு உட்பட அண்டை மாநிலங்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி சந்திப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Project Water Worth என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள திட்டத்தில், கேபிள் வாயிலாக இந்தியா மற்றும் பிற நாடுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் வரை கேபிள்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த கேபிள், பூமியின் சுற்றளவை விட நீளமானது ஆகும். படகு நிறுத்தப்படுவது உள்ளிட்ட பிற காரணங்களால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இது போன்ற அதிக ரிஸ்க் உள்ள பகுதிகளில் கேபிள்களை பதிக்க மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் கடைப்பிடிக்கப்படும். 25000 மைல் நீளமுள்ள நீருக்கடியில் கேபிள் திட்டத்திற்கு நிறுவனம் 100% சொந்தமாக இருக்கும் என்றும் நிறுவனம் 100 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிடக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கடலில் மாசு ஏற்படாத வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் அதிக பொருளாதார ஒத்துழைப்பை செயல்படுத்தும். அதேபோல், டிஜிட்டல் உள்ளடக்கத்தை எளிதாக்கும் மற்றும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிற முக்கிய பிராந்தியங்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று மெட்டா குறிப்பிட்டுள்ளது.
மெட்டா இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. இந்தியா அதன் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும். கடலுக்கடியில் உலகின் மிக நீளமான, அதிக திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கேபிள் திட்டத்தை இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற இடங்களை இணைக்க மெட்டா கொண்டு வருகிறது என்று மெட்டா-வின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கேபிள் திட்டம் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான மேம்பாடு வளர்ச்சி அடையும் என்று மெட்டா கூறியுள்ளது. இன்டர்நெட் இணைப்புக்கும், நாடுகளை இணைப்பதற்கும், உள்ளூர் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள், வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கும் கடலுக்கு அடியில் கேபிள் நெட்வொர்க் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது நிறுவனத்தை முழுவதுமாக AI-க்கு மாற்றுவதால், எதிர்கால AI கண்டுபிடிப்புகளைத் திறப்பதற்கு கடல்சார் கேபிள்கள் இன்றியமையாததாக மெட்டா கருதுகிறது .
கடந்த மாதம், நிறுவனம் இந்த ஆண்டு தனது செலவினங்களை $65 பில்லியனாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அதன்படி, நிறுவனம் பெருகிய முறையில் சக்தி வாய்ந்த பெரிய மொழி மாதிரிகளைப் பயிற்றுவித்து ஹோஸ்ட் செய்யும் திறன் கொண்ட ஒட்டுமொத்த தரவு மையங்கள் உருவாகவுள்ளது.
பால்டிக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலில் சமீபத்திய மாதங்களில் கடலுக்கடியில் உள்ள கேபிள்களை டேங்கர்கள் தங்கள் நங்கூரங்களை இழுத்துச் சென்றதை அடுத்து இந்த திட்டத்தின் அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, மெட்டா-வின் வலைப்பதிவு இடுகையின்படி, வாட்டர் வொர்த் திட்டம் 8 முதல் 16 ஃபைபர் ஜோடிகளைப் பயன்படுத்தும் வழக்கமான அமைப்புகளுக்குப் பதிலாக 24 ஃபைபர் ஜோடிகளைக் கொண்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள்-ஐ பயன்படுத்துவதன் மூலம் தரவு பரிமாற்ற திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு கூட்டாளிகளுடன் உள்கட்டமைப்பு கண்டுபிடிப்புகளை இயக்கி வருவதாகவும், 20க்கும் மேற்பட்ட கடல்சார் கேபிள்களை உருவாக்கியுள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.
ப்ராஜெக்ட் வாட்டர் வொர்த் மூலம், AI மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நன்மைகள், அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய மெட்டா முயற்சிப்பதாக கூறியுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications