Microsoft: 10000 ஊழியர்களை துரத்திவிட்டு 10 பில்லியன் முதலீடு.. சத்ய நாதெல்லா திட்டம் என்ன..?

உலகின் டாப் டெக் சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆயிரம் ஊழியர்களைக் கடந்த 6 மாதத்தில் பணிநீக்கம் செய்துள்ள வேளையில் தற்போதும் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

டெக் சேவை துறையில் அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த மாற்றத்தில் இருக்கும் வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் மைக்ரோசாப்ட் தற்போது சர்வதேச டெக் உலகை ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் தொகையை 12000 ஊழியர்கள் பணிநீக்கத்திற்குப் பின் செய்துள்ளது.

சத்ய நாடெல்லா அப்படி எந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா..?

சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா

அதிரடி முடிவுகளுக்குப் பெயர்போன சத்ய நாடெல்லா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்துடன் பல ஆண்டுக்கு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தில் கையெழுத்திட்டு உள்ளது.

OpenAI நிறுவனம்

OpenAI நிறுவனம்

இன்று உலகமே வியந்து பார்த்து வரும் ஆன்லைன் சேட்பாட் ஆன ChatGPT-ஐ உருவாக்கிய நிறுவனம் தான் இந்த OpenAI. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நிறுவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.

10 பில்லியன் டாலர்

10 பில்லியன் டாலர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்ய உள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், சந்தை கணிப்புகள் மற்றும் ஆய்வுகள் படி சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு

மைக்ரோசாப்ட், OpenAI நிறுவனத்தில் ஏற்கனவே 3 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது, இந்த நிலையில் புதிய முதலீடுகள் மூலம் மைக்ரோசாப்ட் எதிர்கால வளர்ச்சிக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும், OpenAI நிறுவனம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது தெரிகிறது.

ChatGPT அறிமுகம்

ChatGPT அறிமுகம்

மைக்ரோசாப்ட், OpenAI நிறுவன கூட்டணியில் மனிதர்களின் கேள்விகளுக்கு டெக்ஸ்ட், இமேஜ், மற்றும் இதர மீடியா மூலம் பதில் அளிக்கிறது OpenAI நிறுவனத்தின் generative artificial intelligence. OpenAI நிறுவனத்தின் ChatGPT நவம்பர் மாதம் அறிமுகமாகிப் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

புதிய இண்டர்நெட் உலகு

புதிய இண்டர்நெட் உலகு

OpenAI நிறுவனத்தின் artificial intelligence தொழில்நுட்பம் புதிய இண்டர்நெட் உலகை அமைக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது என்று, இதன் மூலம் புதிய கூகுள் சர்ச் இன்ஜின் முதல் போட்டோ எடிட்டர் வரையில் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என அறியப்படுகிறது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், டெஸ்லா-வில் எலான் மஸ்க், மெட்டாவில் மார்க் ஜூக்கர்பெர்க் பணிநீக்கம் செய்த 2022 ஆம் ஆண்டிலேயே பல நூறு ஊழியர்களை முன்கூட்டியே பணிநீக்கம் செய்து செலவுகளைப் பெரிய அளவில் கட்டுப்படுத்தித் தனது சம்பளத்தையும், சம்பள உயர்வையும் காப்பாற்றிக் கொண்டார்.

11000 ஊழியர்களைப் பணிநீக்கம்

11000 ஊழியர்களைப் பணிநீக்கம்

இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் 2வது ரவுண்டு பணிநீக்க திட்டத்தில் இந்நிறுவனத்தின் சர்வதேச அலுவலகத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இந்த 2வது ரவுண்ட பணிநீக்கத்தில் இன்ஜினியரிங் மற்றும் HR பிரிவில் இருந்த ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+