அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், சீனாவில் உள்ள தனது கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 700 முதல் 800 ஊழியர்களுக்கு, சீனாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் விருப்பத்தை வழங்கியுள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே அதிகரித்துள்ள வர்த்தக பதற்றங்களின் எதிரொலியாக இந்த முடிவை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. சீனாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் அதிகளவில் இல்லை என்றாலும் டெவலப்மென்ட் சென்டர் வைத்துள்ளது.

சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய விருப்பம் அளிக்கப்பட்ட ஊழியர்கள் பெரும்பாலும் சீன நாட்டவர்கள் தான். இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் சீன ஊழியர்கள் அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடமாற்றம் செல்லும் வாய்ப்பை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த ஊழியர் இடமாற்ற முடிவுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முதன்மையான காரணமாக அமெரிக்கா-சீனா இடையே உள்ள வர்த்தக தடை மற்றும் கொள்கை பதற்றங்கள் தான். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள், கம்ப்யூட்டர் சிப்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து சீன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தச் சூழலில், சீனாவில் உள்ள தனது முக்கிய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சீனாவில் இருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயர வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் வர்த்தகம் பாதிக்காமல் இயங்கும், சீனா - அமெரிக்கா மத்தியில் பிரச்சனை தீவிரம் அடைந்தால் சீன அலுவலகத்தை மூட வேண்டிய கட்டாயம் இருந்தாலும் தப்பித்துக்கொள்ள இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு இருக்கும் என யூகிக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், அமெரிக்க வர்த்தகத் துறை, செயற்கை நுண்ணறிவு மாடல்களை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளைப் பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்தச் AI மாடல்கள் மென்பொருள் மற்றும் பயிற்சி தரவுகள் ரகசியமாக வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக, சீனாவில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற அச்சமும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இருக்கலாம்.
இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த இடமாற்றம் குறித்து விளக்கம் அளிக்கும்போது, மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு நிறுவனத்திற்குள்ளேயே வாய்ப்புகளை வழங்குவது தங்களின் உலகளாவிய வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் மைக்ரோசாப்ட் சீனாவில் அதிகப்படியான கவனம் செலுத்தும், தொடர்ந்து சீனாவில் இயங்குவதற்கான பணிகளைச் செய்யும் எனவும் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications