உலகெங்கிலும் உள்ள Windows 10 பயனர்கள் புதிய Crowdstrike அப்டேட் காரணமாகப் பலரின் கம்ப்யூட்டர் BSOD என்னும் ப்ளூ ஸ்கரீன் பிரச்சனையால் செயலிழந்துள்ளது. இதன் வாயிலாக இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை தரகு நிறுவனங்களின் கருவிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது. இதனால் நாட்டின் முன்னணி தரகு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை வர்த்தக சரிவால் முதலீட்டாளர்கள் சோகத்தில் இருக்கும் வேளையில், BSOD பிரச்சனை கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
இது கம்ப்யூட்டர் அப்டேட் செய்யப்படும் போது, முழுமையாக அப்டேட் ஆகாமல் பாதியிலேயே ப்ளூ ஸ்கிரீன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு உள்ளது. விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் இந்த பிரச்சனையால் விமான நிலையங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் கம்பியூட்டர்கள் செயலிழந்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய சேவை பாதிப்பு காரணமாக, இந்தியாவின் முன்னணி பங்கு வர்த்தக நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. ஏஞ்சல் ஒன் (Angel One), 5பைசா (5paisa), IIFL செக்யூரிட்டீஸ் (IIFL Securities), மற்றும் நுவாமா (Nuvama) போன்ற பல ப்ரோகரேஜ் நிறுவனங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைக்ரோசாஃப்ட்-ன் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் Crowdstrike அப்டேட் பிரச்சினையின் விளைவாக தங்கள் டெக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக 5பைசா மற்றும் IIFL செக்யூரிட்டீஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன.
"சைபர் செக்யூரிட்டி தீர்வுகளை வழங்கும் Crowdstrike/Microsoft சேவையில் ஏற்பட்ட உலகளாவிய சேவை பாதிப்பு காரணமாக, எங்களின் தொழில்நுட்ப அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் குழு இரு நிறுவனங்களுடனும் இணைந்து, விரைவில் முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வரப்படுகிறது," என்று 5பைசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஞ்சல் ஒன், நுவாமா, மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) போன்ற ப்ரோகரேஜ் நிறுவனங்களின் வர்த்தகர்களும் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்தனர். இந்த கோளாறு காரணமாகப் பலர் தங்கள் வர்த்தகத்தில் பணத்தை இழந்துள்ளதாகும் டிவிட்டரில் பதிவுகளை செய்து வருகின்றனர்.
இதேபோல் குறைந்த கட்டண ப்ரோகரேஜ் நிறுவனமான Groww, CrowdStrike உடன் எங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு இயங்காததால், தங்கள் சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், பங்குச் சந்தை உலகில் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகிறது. சீரான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதற்காக, ப்ரோகஜேர் நிறுவனங்கள் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இதோடு பங்குச்சந்தை BSE, NSE சந்தைகள் எவ்விதமான பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications