மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா அதிரடி முடிவு.. ஹைதராபாத் மக்கள் ஷாக்..!!

உலக டெக் நிறுவனங்களுக்கு இந்தியா தான் இதயம் போன்றது, இந்திய சந்தை இல்லாமல், இந்திய டெக் ஊழியர்கள் இல்லாமல் இயங்க முடியாது. இந்த நிலையில் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் இந்தியாவில் தனது நிறுவனங்களை அடுத்தடுத்து திறந்து வரும் வேளையிலும், இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் மற்றும் அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தாலும் திறன்மிக்க டேட்டா சென்டர்களின் தேவையும் அவசியமும் அதிகரித்துள்ளது.

இதேபோல் இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் கிளவுட் சேவைகள் இல்லாமல் எந்த டிஜிட்டல் சேவையும் இல்லை என்றான பிறகு கிளவுட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அதன் டேட்டா சென்டரை விரிவாக்கம் செய்து வருகிறது.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா அதிரடி முடிவு.. ஹைதராபாத் மக்கள் ஷாக்..!!

இந்த நிலையில் சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், ஹைதராபாத்தில் சுமார் ரூ.267 கோடி மதிப்பிலான 48 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. சத்ய நாடெல்லா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஹைதராபாத் என்பதால் மைக்ரோசாப்ட்-ன் பெரும்பாலான செயல்பாடுகள் இந்த நகரத்திலேயே அமைகிறது.

இந்த நிலையில் டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான ப்ராப்ஸ்டாக் (Propstack) வெளியிட்டுள்ள தகவல் படி, ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நில மொத்த விற்பனையாளரான சாய் பாலாஜி டெவலப்பர்ஸ் நிறுவனத்திடம் இருந்து மைக்ரோசாப்ட் சுமார் 267 கோடி ரூபாய்க்கு 48 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் தனது டேட்டா சென்டர் வணிகத்தை விரிவுபடுத்தப் பெரிய திட்டங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த பகுதியில் மிகப்பெரிய டேட்டா சென்டர்களில் ஒன்றை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலம் ஹைதராபாத் நகர மையத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் நிறுவனம் இந்த நிலத்திற்காக அதிக விலையைக் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

மும்பை, சென்னை மற்றும் புனே ஆகிய மூன்று பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் மைக்ரோசாப்ட் டேட்டா சென்டர் நெட்வொர்க் உடன் ஹைதராபாத் டேட்டா சென்டர் இணைக்கப்பட உள்ளது.

இதைவிட முக்கியமாக மைக்ரோசாஃப்ட் ஹைதராபாத்தில் டேட்டா சென்டர் வணிகத்திற்காக மேலும் இரண்டு நிலங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் டேட்டா சென்டர் வர்த்தகம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது கூகுள, ரிலையன்ஸ், அதானி குழுமம் உட்பட பல குழுமங்கள் டேட்டா சென்டர் விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

பெங்களூரு மற்றும் நொய்டா தவிர, மைக்ரோசாஃப்ட் தற்போது ஹைதராபாத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டரை இயக்கி வருகிறது. இந்த கேம்பஸ்-ல் தான் அசூர், விண்டோஸ், ஆபீஸ் மற்றும் பிங் போன்ற மைக்ரோசாப்ட்டின் சேவைகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+