உலக நாடுகள் தனிநபர் தரவுகள் பாதுகாப்பில் மிகப்பெரிய அளவிலான முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, இதற்கு முக்கியம் காரணம் இன்றைய இணைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் சேவையில் செயல்படுகிறது, இதனால் இணையத்தில் மக்களின் முக்கியமான தரவுகள் பரவிக்கிடக்கிறது. இந்த நிலையில் இதை சரியாக பாதுகாக்கப்படாமல் ஹேக்கர்கள் திருடினால் பெரும் ஆபத்தை உருவாக்கும்.
இது ஒருபுறம் இருக்க எந்தொரு நிறுவனமும், தனது வாடிக்கையாளரிடம் (மக்கள்) எந்த தரவுகளை பெற வேண்டும், எதை பெற கூடாது, சேகரிக்கப்பட்ட தரவுகளை எப்படி கையாள வேண்டும் என்ற பலதரப்பட்ட விஷயங்களுக்கு கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

இதிலும் குறிப்பாக தற்போது இளம் தலைமுறையினர் எப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் வருவதால் உலக நாடுகள் குழுந்தைகளின் தரவுகளின் நிர்வாகத்திற்கென தனி கொள்கையை உருவாக்கியுள்ளது.
உதாரணமாக அமெரிக்க அரசு குழந்தைகளின் தரவுகள் நிர்வாகத்திற்காக Children's Online Privacy Protection Act (COPPA) என்ற விதியை உருவாக்கியுள்ளது. COPPA விதியை மீறியற்காக தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது வழக்கு கொடுக்கப்பட்டு சுமார் 20 மில்லியன் டாலர் அளவிலான தொகையை செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமை விகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், பெற்றோர் அனுமதி பெறாமல் அல்லது பெற்றோர்களுக்கு தெரியாமல் Xbox gaming system-ல் கணக்கை துவங்கிய குழந்தைகளில் தரவுகளை மைக்ரோசாப்ட் சட்டத்திற்கு புறம்பாக கலெக்ட் (திருடி) செய்துள்ளது மட்டும் அல்லாமல் அதை பாதுகாப்பாக சேமித்தும் வைத்துள்ளது என அமெரிக்க Federal Trade Commission (FTC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விதிமீறல் பிரச்சனையை சரி செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 20 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அபராதமாக செலுத்த Federal Trade Commission உத்தரிவிட்டு உள்ளது. இதுப்போன்ற பிரச்சனை எதிர்காலத்தில் வர கூடாது என்பதற்காக Xbox-ல் குழந்தைகளுக்கான privacy கொள்கையை மாற்ற உள்ளது.
COPPA விதிமுறைகளின் படி ஆன்லைன் சேவை தளம் முதல் சாதாரண இணைய தளம் வரையில் 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தரவுகளை சேகரிக்க வேண்டுமாயின் அவர்களின் பெற்றோர்-யிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதையும் மைக்ரோசாப்ட் மீறியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications