பெங்களூரு: பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி செய்பவர்கள் வார இறுதி நாட்களில் என்ன செய்வார்கள் ? நண்பர்களோடு ஊர் சுற்றுவார்கள், பார்ட்டிக்கு செல்வார்கள் இப்படி தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பொறியாளராக பணி புரியும் ஒரு நபர் வார இறுதி நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது.
பெங்களூரில் மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் வார இறுதி நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. வெங்கடேஷ் குப்தா என்பவர் அண்மையில் தான் பயணம் செய்த ஆட்டோவின் ஓட்டுநர் மைக்ரோசாப்ட் நிறுவன பொறியாளர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு இருக்கிறார். அவர் ஆட்டோ ஓட்டும் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொதுவாகவே கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலருக்கும் ஊதியம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு மன அழுத்தம் அதனால் ஏற்படும் தனிமை என பல பிரச்னைகள் வருகின்றன. இந்த தனிமையை போக்கவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் பலரும் தங்களுக்கு பிடித்த வேலைகளை செய்கிறார்கள்.
அப்படி தான் இந்த 35 வயது இளைஞர், வார இறுதி நாட்களில் தனிமையை போக்க ஆட்டோ ஓட்டுகிறாராம். இவர் ஆட்டோ ஓட்டும் புகைப்படத்தை வெங்கடேஷ் குப்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்., அதில் அவரது முகம் தெரியவில்லை. ஆனால் அவர் அணிந்திருக்கும் சட்டையில் மைக்ரோசாப்ட் என அச்சிடப்பட்டுள்ளது. 35 வயதாகும் இவர் நம்ம யாத்ரியில் பதிவு செய்து கோரமங்கலா பகுதியில் வார இறுதி நாட்களில் மட்டும் ஆட்டோ ஓட்டுகிறாராம்.
இந்த பதிவின் கீழ் சமூக வலைத்தளவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மனிதர்கள் உடனான கலந்துரையாடலே இல்லாமல் போய்விடுகிறது. எனவே இவரது முடிவு சரி தான் என ஒரு பயனர் கூறியுள்ளார்.
புதிய மனிதர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பாக இது இருக்கும் என ஒருவர் கூறியுள்ளார். ஆனால் பெங்களூரு டிராஃபிக்கில் ஆட்டோ ஓட்டுவதற்கு தனியாகவே இருந்துவிடலாம் என தோன்றிவிடும் ஒரு பயனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதேபோல ஒரு பெரு நிறுவன ஊழியர் ரேபிடோ பைக் ஓட்டுவதாக செய்தி வெளியானது. சிலர் இது போன்ற வேலைகள் மூலம் இத்துறை சார்ந்தவர்களுடன் நெட்வொர்கிங் செய்து கொள்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications