மைக்ரோசாப்ட் கடந்த மாதம் உலகளவில் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படத் துவங்கியது மைக்ரோசாப்ட் நிர்வாகம்.
இன்னும் பலர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிநீக்கம் கடிதங்களைப் பெற்று வரும் வேளையில் எதிர்காலம் குறித்துக் கடிதங்களைப் பெறுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் சில முக்கியமான பிரிவுகளை டார்கெட் செய்து பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்ட்
அமெரிக்காவின் ரெட்மாண்ட்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஹோலோலென்ஸ், சர்ஃபேஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் பிரிவுகளின் வன்பொருள் பிரிவுகளை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவதாக ப்ளூம்பெர்க்கின் தெரிவித்துள்ளது.
3 முக்கியப் பிரிவு
இந்த நிலையில் HoloLens, Surface மற்றும் Xbox பிரிவில் சியாட்டில் நகரத்தில் மட்டும் சுமார் 617 ஊழியர்கள் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த சில ஊழியர்கள் பணிநீக்கக் கடிதங்களைப் பெறத் தொடங்கியுள்ளனர்.
HoloLens டீல்
ஜனவரி மாதம் அமெரிக்க அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து 6900 HoloLens combat goggles வாங்கும் 400 மில்லியன் டாலர் திட்டத்தை ரத்து செய்த நிலையில், தற்போது பணிநீக்கத்தில் அதிகளவிலான பணிநீக்கம் HoloLens பிரிவில் உள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் 400 மில்லியன் டாலர் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தான் பணிநீக்கம் செய்யப்படுகிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.
HoloLens ஊழியர்கள் பணிநீக்கம்
இதேவேளையில் HoloLens பிரிவின் முன்னாள் ஊழியரான Kristian Davila லின்கிடுஇன் தளத்தில் தன்னுடன் பணியாற்றிய பலர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதேபோல் டிசைன் பிரிவில் பணியாற்றிய Sophie Stellmach-ம் இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
xbox பிரிவு
இதேவேளையில் மைக்ரோசாப்ட்-ன் கேமிங் பிரிவான xbox தலைவர் பில் ஸ்பென்சர் தனது அணியில் இருக்கும் பலருக்கு பணிநீக்க கடிதத்தை அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளைக் குறைக்கும் விதமாக மைக்ரோசாப்ட் அதிக லாபம் வருவாய் வாடிக்கையாளர்களை அளிக்காத பிரிவுகளைக் குறித்துப் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications