மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதன்கிழமை அன்று தனது முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப்பை அறிமுகம் செய்துள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங் இன்னும் சில ஆண்டுகளில் சாத்தியமாகும் என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது. கூகுள் மற்றும் ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் இதே போன்ற கணிப்புகளைக் கூறியுள்ளன. கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றம் நாம் எதிர்பார்த்ததை விட மிகவும் விரைவாக வரக்கூடும் என்பதற்கான அறிகுறியாக இது உள்ளது.
குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?: குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது ஒரு புது விதமான கம்ப்யூட்டர் டெக்னாலஜி. பாரம்பரிய கம்ப்யூட்டர்கள் 0 மற்றும் 1 போன்ற நம்பரை பயன்படுத்தி வேலை செய்யும். ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் ஒரே நேரத்தில் 2 எண்களையும் பயன்படுத்தி வேலை செய்யும். இதனால் சில கஷ்டமான வேலைகளையும் எளிதில் செய்யும் வகையில் இந்த கம்ப்யூட்டர்கள் இருக்கும்.

தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள "மஜோரானா 1" என்ற சிப் மிகவும் வேகமாக வேலை செய்யக்கூடிய சிப் ஆகும். இந்த சிப் குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் அடிப்படை யூனிட்களான கியூபிட்களை பயன்படுத்தி வேலை செய்யும். குவாண்டம் கம்ப்யூட்டரை பொறுத்தவரையில் கியூபிட்கள் தான் முக்கியம். சாதாரண கம்ப்யூட்டர்கள் பிட்ஸ் அதாவது ஜீரோ அல்லது ஒன்று என்ற எண்ணை பயன்படுத்தி தகவல்களை சேகரிக்கும். ஆனால் ஜீரோ மற்றும் ஒன்று ஆகிய இரண்டு எண்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டதுதான் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர்கள். இதனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் பவர்ஃபுல்லாக செயல்படும்.
எதிர்காலத்தில் குவாண்டம் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு இந்தச் சிப் ஒரு அடித்தளம் அமைப்பதாக பொறியாளர்கள் கருதுகின்றனர். மைக்ரோசாஃப்டின் இந்தக் கண்டுபிடிப்பு டேட்டா சென்டர்களில் குவாண்டம் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்த உதவுவதோடு வேதியியல், ஹெல்த்கேர் போன்ற பிற துறைகளிலும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை கம்ப்யூட்டர்கள் பிழைகள் ஏற்படுவதைத் தடுத்து செயல்படக்கூடியது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஜோரானா 1 சிப் டோபோலஜிக்கல் கோர் அடிப்படையிலான குவாண்டம் ப்ராசசிங் யூனிட் ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது இந்த சிப்பை ஒரு சிறிய ஸ்டிக்கி நோட் அளவுக்கு தான் கண்டுபிடித்துள்ளது. இந்த சிப் தற்போதைய நிலவரப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்ய பயன்படுத்தப்படும். எதிர்காலத்தில் கம்ப்யூட்டரில் பெரிய முன்னேற்றங்களுக்கு இது வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாடெல்லா புதிய கண்டுபிடிப்பு பற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிறுவனத்தின் 20 வருட ஆராய்ச்சிக்கு பிறகு இந்த சிப் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் இது ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை குறிப்பதாகவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications