செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. அதாவது, 2025ஆம் ஆண்டில் இந்த பணிநீக்கம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அவ்வபோது பணியாளர்களை நீக்கி வருகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 2 வருடத்தில் 3 முறை பணிநீக்கம் அறிவித்த நிலையில் தற்போது, மீண்டும் பணி நீக்கங்களை பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், அடுத்த மாதம் முதலே வேலை இழப்புகளை செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த பணிநீக்கங்கள், "span of control" மற்றும் "PM ratio" போன்ற செயல்திறன் குறியீடுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில், "குறைந்த செயல்திறன்" கொண்டவர்கள் என கருதப்பட்ட 2,000 பணியாளர்களை மைக்ரோசாஃப்ட் பணிநீக்கம் செய்தது. இதையடுத்து, தற்போது மே மாதம் முதல் அமலுக்கு வரக்கூடிய அடுத்தக்கட்ட பணிநீக்கங்களை பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைக்ரோசாஃப்ட் குழுக்களின் சில தலைவர்கள் குறிப்பாக நடுத்தர மேலாளர்களை குறைப்பது மற்றும் ஒரு திட்டத்தில் கோடிங் செய்யும் பணியாளர்களின் விகிதத்தை கோடிங் செய்யாத பணியாளர்களுடன் ஒப்பிட்டு எப்படி அதிகரிக்கலாம் என்பதையும் குறிப்பாக விவாதித்து வருகிறார்கள் என்று வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சில பிரிவுகள் தங்களது "span of control" வரம்பு, அதாவது ஒவ்வொரு மேலாளருக்கும் நேரடியாக அறிக்கை அளிக்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிறுவனத்தில் மூத்த பதவிகள் உள்ள அந்த வட்டாரங்கள் கூறியதாவது, பணிநீக்கங்கள், எவ்வளவு பெரிய அளவில் இருக்கும் என்பது தெளிவாக இல்லை, ஆனால் அது அவர்களின் குழுவின் குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கலாம் என்று ஒருவர் கூறினார். இதற்கு மைக்ரோசாஃப்டின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இருப்பினும், தொழில்நுட்பத் துறையில், ஏற்கனவே நடுத்தர மேலாளர்களை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி, அமேசான் தனிப்பட்ட பங்களிப்பாளர்களுக்கும் மேலாளர்களுக்கும் இடையிலான விகிதத்தை அதிகரிக்க முயற்சித்து வருகிறது.
மேலும், டிசம்பரில், கூகுள் அதன் செயல் திறனை உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக துணை தலைவர் மற்றும் மேலாளர் பதவிகளை 10% குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார். இந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குள், சில குழுக்களிடையே "PM ratio" என்பதைக் குறைப்பதைப் பற்றிய விவாதங்கள் நடைபெறுகிறது. இது, தயாரிப்பு மேலாளர்கள் அல்லது திட்ட மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் விகிதத்தை குறிக்கிறது.
மைக்ரோசாஃப்டின் பாதுகாப்புத் தலைவரான சார்லி பெல் கூறுகையில், அமேசானிலிருந்து இந்த கருத்தை கொண்டு வந்துள்ளார், அங்கு அவர் கிளவுட் முன்னணியாளர் இருந்தார். அங்கு இதை "பில்டர் ரேஷியோ" என அழைக்கின்றனர், அங்கு இது மென்பொருள் பொறியாளர்களின் விகிதத்தை "பில்ட் செய்யாதவர்கள்", அதாவது திட்ட மேலாளர்கள் மற்றும் திட்ட மேலாளர்களுடன் ஒப்பிட்டு கண்காணிக்கின்றது.
இதேபோல், மைக்ரோசாப்ட் சில நிறுவனங்களில் இந்த இலக்குகளை அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. உதாரணமாக, பெலின் பாதுகாப்பு அமைப்பில் தற்போது ஒவ்வொரு திட்ட மேலாளருக்கு 5½ பொறியாளர்கள் உள்ளனர், மேலும் மைக்ரோசாப்ட்டின் குறிக்கோள் 10:1 என்ற விகிதத்திற்கு எட்ட வேண்டும் என்று, பெலின் திட்டங்களை அறிந்த ஒரு நபர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புள்ளி விவரத்தின் படி, இந்த விகிதம் எப்படி பல பேர் கோடிங் செய்கின்றனர் என்பதற்கான ஒரு பிரதிபலிப்பாக செயல்படுகிறது. நிறுவனம், மேலாளர்கள் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை பூர்த்தி செய்யவும், ஒரு குறிப்பிட்ட குழு அடிப்படையிலான விகிதத்தை அடைவதற்கு தேவையான பணிநீக்கங்களை பற்றிய விவாதங்களை மேற்கொண்டு வருகின்றது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மைக்ரோசாஃப்ட் குறைந்த செயல்திறன் கொண்டதாகக் கருதப்பட்ட சுமார் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்தநிலையில், தற்போது, இந்த பணிநீக்கங்கள், ஒரு மாதம் அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்தில் அமலுக்கு வரலாம், மேலும் இந்த பணிநீக்கத்தில் குறைந்த செயல்திறன் கொண்ட பணியாளர்களும் அடங்குவர். மேலும், குறைந்தது சில மைக்ரோசாஃப்ட் தலைவர்கள், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக செயல்திறன் மதிப்பீட்டில் "Impact 80" அல்லது அதற்கு கீழ் மதிப்பெண்கள் பெற்ற பணியாளர்களை பணிநீக்கம் செய்ய பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
மைக்ரோசாஃப்ட் பணியாளர்களை 0 முதல் 200 வரை உள்ள அளவுகோலின் மூலம் மதிப்பிடுகிறது, இது "ManageRewards slider" என அழைக்கப்படுகிறது. இந்த மதிப்பீடுகள், ஒரு ஊழியர் பங்கு விருதுகள் மற்றும் ரொக்க போனஸில் எவ்வளவு பெறுகிறார் என்பதைப் பாதிக்கின்றன. இந்த அளவுகோலின் மையப்பகுதி 100 ஆகும். அதே நேரத்தில் 0, 60 மற்றும் 80 ஆகியவை குறைந்த செயல்திறன் கொண்டவை மற்றும் 120, 140 மற்றும் 200 ஆகியவை அதிக செயல்திறன் கொண்ட பணியாளர்களாக கருதப்படுகின்றனர். "Impact 80" என்பது ஊழியர்களுக்கு அவர்களின் சாதாரண பங்கு விருதில் 60% மற்றும் அவர்களின் அதிகபட்ச போனஸில் 80% ஐ வழங்குகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications