ஆந்திராவில் நிலம் வாங்கிய மைக்ரோசாப்ட்..181 கோடி ரூபாய்க்கு அப்படி எங்க வாங்கியிருக்காங்க..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைய இருக்கும் தலைநகர் அமராவதிக்கு அருகே 25 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது.

ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து தலைநகர் அமராவதியை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிற அமைச்சர்கள் பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆந்திராவில் நிலம் வாங்கிய மைக்ரோசாப்ட்..181 கோடி ரூபாய்க்கு அப்படி எங்க வாங்கியிருக்காங்க..!

இதன் ஒரு பகுதியாக அமைச்சர் நர லோகேஷ் அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் செய்து பல்வேறு முன்னணி டெக் நிறுவன தலைவர்களை சந்தித்து ஆந்திர பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகருக்கு அருகே நந்திகாமா என்ற நகரில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி இருக்கிறது. 181 கோடி ரூபாய்க்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிலத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமராவதி நகரத்திலிருந்து ஒரு மணி நேரத்திலேயே இந்த இடத்திற்கு பயணம் செய்துவிடலாம். நேட்கோ பார்மா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிலத்தை கையகப்படுத்தி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பத்திரப்பதிவுக்காக முத்திரைத்தாள் கட்டணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 9.96 கோடி ரூபாயையும் , பதிவு கட்டணமாக 3.62 கோடி ரூபாயையும் செலுத்தி இருக்கிறது. அமராவதில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கக் கூடிய ஒரு நகரம் இது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சி அமைத்தது. இதனை அடுத்து அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் நிலங்களின் மதிப்பு கணிசமான அளவு உயர்ந்து விட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நிலத்தை வாங்கி வருகிறது.

புனேவில் சில மாதங்களுக்கு முன்பு தான் 1000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நிறுவனம் 30 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கையகப்படுத்தியது. பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கக்கூடிய பிஞ்சவாடி பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த நிலத்தை வாங்கி இருக்கிறது.

அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் புனேவின் விவா ஹைவேஸ் பகுதியில் 16 ஏக்கர் நிலத்தை 453 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டு இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனம் 328 கோடி ரூபாய்க்கு புனேவில் நிலத்தை வாங்கியது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+