இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிசண்ட், இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகியவற்றுடன் மைக்ரோசாப்ட் முக்கியமான கூட்டணி ஒப்பந்தம் செய்துள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாடெல்லா அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏஜென்டிக் AI (சுயமாக சிந்தித்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அதை பரவலாக்கும் நோக்குடன் இந்த நான்கு நிறுவனங்களும் சேர்ந்து மொத்தமாக 50,000 மைக்ரோசாப்ட் கோபைலட் லைசென்ஸ்களை பயன்படுத்த வழங்க உள்ளது மைக்ரோசாப்ட். இது நிறுவன அளவிலான AI பயன்பாட்டுக்கு புதிய அளவுகோல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஜென்டிக் AI என்பது வெறும் கேள்விக்கு பதில் சொல்லும் சாட்பாட் அல்ல, மாறாக தானாக சிந்தித்து, முடிவெடுத்து, வேலையை முடிக்கும் தொழில்நுட்பம். உதாரணமாக வாடிக்கையாளர் சேவை, கணக்கு பராமரிப்பு, மனிதவள மேலாண்மை போன்ற பணிகளை இது தானாகவே செய்யும்.
இந்திய ஐடி நிறுவனங்கள் இதை பயன்படுத்தினால் ஊழியர்களின் உற்பத்தித்திறன் பல மடங்கு உயரும், செலவு குறையும், பிழைகள் குறையும். இதன் பயன் இறுதியில் வங்கி, காப்பீடு, சில்லறை வர்த்தகம், உற்பத்தி போன்ற துறைகளுக்கு சென்றடையும். இதனால் டெக் சேவைகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சத்ய நாடெல்லாவின் இந்திய பயணத்தில் இந்த அறிவிப்பு வெளியானது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது, காரணம் நேற்று மைக்ரோசாப்ட் மாபெரும் முதலீட்டு திட்டத்தை அறிவித்த அடுத்த நாள் டாப் 4 ஐடி சேவை நிறுவனத்துடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துள்எளது.

அதாவது டிசம்பர் 10 அன்று அவர் இந்தியாவில் AI மற்றும் க்ளவுட் உட்கட்டமைப்புக்காக மைக்ரோசாப்ட் 2029ஆம் ஆண்டுக்குள் 17.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார் சத்ய நாடெல்லா. இந்த முதலீட்டு உடன் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு AI திறன் பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான உடன் பங்குச் சந்தையில் ஐடி நிறுவன பங்குகள் கலவையான நிலையை எதிர்கொண்டன. டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் பங்குகள் சரிவில் தள்ளாடிக்கொண்டு வருகிறது. விப்ரோ பங்கு 0.49 சதவீதம் உயர்ந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications