அமெரிக்கா: மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது முழுக்க முழுக்க தங்களின் கவனத்தை செயற்கை நுண்ணறிவு பக்கம் திருப்பியுள்ளன.
எனவே எந்தெந்த வேலைகளுக்கு எல்லாம் செயற்கை நுண்ணுறிவுகளை பயன்படுத்த முடியுமோ அவற்றுக்கு தங்களால் இயன்ற அளவு செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக நிறுவன மறுசீரமைப்பு செய்யப்பட்டு ஊழியர்கள் பணி நீக்கம் என்பது நடைபெற்று வருகிறது.

மைக்ரோசாப்டை பொறுத்தவரை Azure பிசினஸ் பிரிவினை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இதில் பாதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக ஆப்பரேட்டர்ஸ் மற்றும் மிஷன் இன்ஜினியரிங் பிரிவை சேர்ந்தவர்கள் தான் தற்போது பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டு சுமார் 10,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின் படி சுமார் 1500 பேர் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அரசுகளுக்கான கிளவுட் சேவைகள் போன்றவற்றிற்காக இந்த பிரிவினை கடந்த 2021 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியது.
தற்போது மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு நுட்பம் சார்ந்து இயங்க தொடங்கிவிட்டன. மைக்ரோசாப்ட் நிறுவனம் 2024இல் ஆக்டிவிசன் பிளிஸார்டு மற்றும் எக்ஸ் பாக்ஸ் பிரிவுகளில் இருந்து ஜனவரியில் 1900 பேரை பணி நீக்கம் செய்தது.
அதே போல கூகுள் நிறுவனம் கூட 2024இல் 1,500 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. விற்பனை பிரிவினை சேர்ந்த 1000 பேர், மூன்சூட் எக்ஸ் லேப்பை சேர்ந்த 500 பேர் பணிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டில் மட்டும் 89,333 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளன. சிக்கன நடவடிக்கை, நிறுவன மறுசீரமைப்பு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2024ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 40,000 பேர் வரை பணியை இழந்துள்ளனர். டெல், தோஷிபா, ஃபிளிப்கார்ட், டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதில் அடங்கும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications