அலுவலகங்கள் தொடங்கி சுய தொழில் செய்பவர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என பலரும் தற்போது மடிக்கணினிகளை பெரிய அளவில் பயன்படுத்துகிறோம். இந்திய அரசாங்கம் இவ்வாறு கணினியை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
மைக்ரோசாப்ட்: குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்திருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான மடிக்கணினிகள் மற்றும் கணினிகளில் விண்டோஸ் தான் பிரபலமான ஒரு இயங்குதளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் வாயிலாக தான் நாம் வேர்டு , எக்ஸெல், பவர் பாயிண்ட் உள்ளிட்ட செயலிகள் எல்லாம் பயன்படுத்த முடிகிறது.

அரசு எச்சரிக்கை: இந்த நிலையில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு தகவலில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் பயன்படுத்தக்கூடிய பல்வேறு மடிக்கணினிகளும் கணினிகளும் மிகப்பெரிய ஹேக்கிங் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக கூறி இருக்கிறது. இது தனி நபர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு தொழில்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஹேக்கர்கள் தாக்குதல்: இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில் மைக்ரோசாப்ட் மற்றும் மைக்ரோசாப்ட் வழங்கக்கூடிய பல்வேறு செயலிகளிலும் ஹேக்கர்கள் எளிதாக ஊடுறுவி தாக்குதல் நடத்துவது கண்டறியப்பட்டு இருக்கிறது. ஹேக்கர்கள் மிக எளிமையாக மைக்ரோசாப்ட் செயலிகள் வாயிலாக உங்களுடைய ரகசியமான தகவல்களை திருடிக் கொண்டிருக்கிறார்கள் இதன் மூலம் ரிமோட் முறையில் உங்களுக்கு தெரியாமலேயே உங்களுடைய கணினியை செயல்படுத்தும் வாய்ப்பை பெறுகிறார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பட்டியல்: அந்த வகையில் மைக்ரோசாப்டின் எந்தெந்த செயலிகள் எல்லாம் இந்த தாக்குதலுக்கு ஆளாகிறது என்ற பட்டியலும் அதில் வெளியிடப்பட்டிருக்கிறது. Microsoft Windows, Microsoft Office, Microsoft Dynamics, Browser, Device, Developer Tools, SQL Server, System Center, Open Source Software, Server Software, Extended Security Updates for legacy Microsoft products, Azure, Apps ஆகியவை ஆபத்து பட்டியலில் உள்ளன.
என்ன செய்தால் தப்பிக்கலாம்: விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் 11 பயன்படுத்துபவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் இது தொடர்பாக தங்களுடைய பயனாளர்களுக்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அனைவரும் தங்களுடைய மைக்ரோசாப்ட் செயலிகளை உடனடியாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் விண்டோஸ் அப்டேட் செய்துவிட்டு சிஸ்டமை ரீபூட் செய்து கொள்வது உங்களுடைய கணினியையும் உங்களுடைய தனிப்பட்ட தகவலையும் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications