பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் மகிழ்ச்சி அடைய அதிகளவிலான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய சலுகை அறிவிப்புக் காத்துக்கொண்டு இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கொரோனா தாக்கம்
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையை ஊக்குவிக்க மத்திய அரசு ஆத்ம நிருபர் பாரத் திட்டத்தின் கீழ் பல சலுகைகள் தொழிற்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தனிநபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வரும் ஒரு வாய்ப்பாக மத்திய அரசு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளது.
நிர்மலா சீதாராமன்
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், நாட்டு மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காகத் தனிநபர் வருமான வரிச் சலுகை அளவை உயர்த்த உள்ளதாகத் தெரிகிறது.
0 சதவீதம் வரி
இதன் படி வருடம் 2.50 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு, வருமான வரித்துறை 0 சதவீதம் வரிச் சலுகை அளித்து வரும் நிலையில், இதன் அளவீட்டை 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தி இந்த 2021 பட்ஜெட்டில் அறிவிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை
2019ஆம் ஆண்டு இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும் அனைவருக்கும் டாக்ஸ் ரிபேட் சலுகையை அறிவித்தது. ஆனால் அடிப்படை வருமான வரி சலுகையை உயர்த்தவில்லை.
2020 பட்ஜெட்
இதேபோல் 2020 பட்ஜெட் அறிக்கையிலும் தனிநபருக்கு வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய வருமான வரிக் கணக்கீட்டை அறிவித்தது. இதுவும் பலருக்கும் பெரிய அளவிலான நன்மையை அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடமும் அடிப்படை வருமான வரி சலுகையை அளவீட்டை உயர்த்தவில்லை.
5 லட்சம் வரை வரிச் சலுகை
ஆனால் 2021 பட்ஜெட் அறிக்கையில் மிடில் கிளாஸ் மக்களுக்குப் பலன் கிடைக்கும் வகையில் அடிப்படை வருமான வரி சலுகையை 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாகும் பட்சத்தில் மிடில் கிளாஸ் மக்களுக்கு இது உண்மையிலேயே ஜாக்பாட் தான்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications