இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்ததை தொடர்ந்து ஆர்பிஐ அடுத்த சில நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த சில மாதங்களாக குறைய மிக முக்கியமான காரணம் உணவு பொருட்களின் விலை குறைந்தது தான்.
இந்த நிலையில் தக்காளி விலை கிலோவுக்கு 150 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்திருக்கும் வேளையில், அடுத்த சில நாட்களுக்கு இது தொடரும் என சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தில் அதிகப்படியான மழை காரணமாக விளைச்சல் பாதித்து, போக்குவரத்து தாமதமாகியுள்ளது.

தற்போது ஹிமாச்சல் பிரதேச தக்காளி உற்பத்தி பாதிப்பை, பெங்களூர் தக்காளி உற்பத்தியை வைத்து தான் சரி செய்யப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முக்கிய தக்காளி சப்ளையராக கர்நாடக மாநிலம் விளங்குகிறது.
இந்தியாவில் தக்காளி மட்டும் அல்லாமல் முட்டைகோஸ், காலிபிளவர், கீரை வகைகள், கேரட், பீன்ஸ் என பெரும்பாலான காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த பெரும் பாதிப்பு வட இந்தியாவில் பெய்து வரும் அதிகப்படியான மழை முக்கிய காரணம், இந்த விலை உயர்வால் பல ஆன்லைன் தளங்கள் தக்காளி விற்பனையை பல இடங்களில் நிறுத்தியுள்ளது.
முட்டைகோஸ், காலிபிளவர், கேப்சிக்கம் ஆகியவற்றின் முக்கிய சப்ளையராக ஹிமாச்சல் பிரதேசம் உள்ளது. அதிகப்படியான விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது மாற்று உணவுகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இந்த விலை உயர்வு காய்கறிகள் மட்டும் அல்லாமல் பிற உணவு பொருட்களிலும் எதிரொலித்துள்ளது.
கடந்த வாரம் ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மழை பதிவானது. இதனால் இப்பகுதியில் விவசாய உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு நடுத்தர குடும்பங்களில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வருடத்தில் பெரும்பாலான குடும்பங்களின் வருமானம் பெரிய அளவில் உயராமல் தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. இதற்கு மத்தியில் பலர் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.
இதற்கு மத்தியில் மக்களின் அடிப்படை உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக அவர்களுடைய வீட்டு பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இதனால் மக்களின் முக்கிய செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும், அமெரிக்க மத்திய வங்கி இந்த மாத இறுதியில் வட்டி உயர்த்தும் கணிப்பு வெளி வந்துள்ளதால் ஆர்பிஐ மீண்டும் ரெப்போ விகிதத்தை உயர்த்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications