டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக வரி விகிதங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என ஊடகங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருப்பதால், வரி தாக்கல் செய்யக்கூடிய ஊதியம் பெரும் தனி நபர்கள் அரசு பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
குறிப்பாக தற்போது வருமான வரி உச்சவரம்பு என்பது பழைய வரி முறையில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு 2.5 லட்சம் ரூபாய், அதுவே புதிய நடைமுறையில் வரி தாக்கல் செய்பவர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாய்.

அதாவது ஆண்டுக்கு இவ்வளவு சம்பாதிப்பவர்களுக்கு எந்த வரியும் இல்லை . இந்த நிலையில் புதிய வரி முறையை தேர்வு செய்திருப்பவர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பினை அரசு 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
அடுத்ததாக புதிய வரி நடைமுறையில் 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 20% வருமான வரியும், 15 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வருமான வரியும் விதிக்கப்படுகிறது. இதனை 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 25% வரி என குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய வரி நடைமுறையில் பழைய வரி நடைமுறையில் கிடைக்கக்கூடிய வீட்டு வாடகை அலொவென்ஸ் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டி செலுத்துதல் ஆகியவற்றுக்கு எந்த வரிச்சலுகையும் கிடைப்பதில்லை. எனவே புதிய வரி நடைமுறையில் இவற்றை கொண்டு வர வேண்டும் என பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது பலரும் வீட்டு கடன் வாங்கி ஈஎம்ஐ செலுத்துவதால் , வீட்டுக் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டிக்கான தொகையை குறிப்பிட்டு வரிச் சலுகை பெறும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.
தற்போது ஈக்விட்டி பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை விற்பனை செய்து ஒரு நிதியாண்டில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒருவர் மூலதன ஆதாயம் பெறுகிறார் என்றால் அவருக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற வரம்பினை 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி நிலையான வரிக்கழிவு தற்போது 50,000 ரூபாயாக இருக்கும் நிலையில் அதனை உயர்த்த வேண்டும், காப்பீட்டு பிரீமியங்களுக்காக செலுத்தப்படும் கட்டணங்களுக்கான வரி விலக்கை அதிகப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications