தெருக்களில் பிச்சை எடுத்து ரூ.8.40 லட்சம் சேமித்த மூதாட்டி! இறந்தும் குடும்பத்தைக் காத்த அதிசயம்!

கர்நாடக மாநிலத்தின் மண்டியா நகரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக யாசகம் எடுத்து.. அந்த பணத்தில் வாழ்ந்து வந்த 68 வயது மூதாட்டி அண்மையில் காலமானார். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்த மூதாட்டி வசித்து வந்த வீட்டை ஆய்வு செய்தபோது அங்கு பல லட்சம் ரூபாய் பணம் சேர்த்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆள்த்தியுள்ளது.

யார் இந்த நூர்?: மண்டியா நகரில், குட்டலு சாலையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த நூர் என்ற மூதாட்டி பல ஆண்டுகளாக அப்பகுதியின் போக்குவரத்து சாலைகள் மற்றும் தெருவோரங்களில் அமர்ந்து யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். இதனால் அப்பகுதி மக்களுக்கு இந்த மூதாட்டியை நன்றாகத் தெரியும்.

ஆரம்பத்தில் தனது சகோதரியுடன் வசித்து வந்த நூர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சகோதரியின் மறைவுக்குப் பிறகு அதே வீட்டில் தனியாக வசித்து வந்தார். இப்படியே ஆண்டுகள் உருண்டோடியது. வயது முதிர்வின் காரணமாக கடந்த புதன்கிழமை அன்று நூர் காலமானார்.

தெருக்களில் பிச்சை எடுத்து ரூ.8.40 லட்சம் சேமித்த மூதாட்டி! இறந்தும் குடும்பத்தைக் காத்த அதிசயம்!

இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள மக்கள் இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்தனர். அப்போது அவர் வீட்டில் இருந்த உடமைகளை எல்லாம் சோதித்ததில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் வெளியானது. தன் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அந்த மூதாட்டி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருந்தார்.

அதை எல்லாம் ஆராய்ந்ததில் 10 ரூபாய் நோட்டுகள், 50 ரூபாய் நோட்டுகள், 20 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 30 லட்சம் ரூபாய் பணம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையிலேயே மூட்டைகளை சோதித்ததில் அவருடைய வங்கியில் இருந்த பாலன்ஸ் மற்றும் வீட்டிலிருந்த தொகை ஆகியவற்றையெல்லாம் சேர்த்து ரூ. 8.40 லட்சம் சேமிப்பு இருந்தது தெரியவந்துள்ளது.

Also Read

நூர் மூதாட்டி தான் பிச்சை எடுத்து கிடைத்த பணத்தில் தனக்கு தேவையான செலவை மட்டும் செய்து கொண்டு.. மீதி பணத்தை செலவழிக்காமல் சேமித்து வந்துள்ளார். வறுமையிலும் அவர் கடைபிடித்த சிக்கனம் உண்மையிலேயே தேவையின்றி செலவு செய்பவர்களுக்கு சிறந்த பாடமாக அமைகிறது. அவரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ரூ.8.40 லட்சம் தொகை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நூர் மூதாட்டியின் இந்த மனநிலை உண்மையிலேயே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்றைய மாத சம்பளக்காரர்கள் பலர் சேமிக்கவே தடுமாறும் சூழலில் தனக்கு யாரும் இல்லை என்ற போதிலும் கிடைத்த பணத்தை சிறுக சேமித்து இவ்வளவு பெரிய தொகையை சேர்த்து வைத்தது தான் ஹைலைட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+