தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்காவை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாடு அரசு 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பயணித்து வருகிறது.
இந்த இலக்கை அடையத் தமிழ்நாட்டிற்கு உற்பத்தித் துறை என்ற ஒரு இன்ஜின் மட்டும் போதாது, சேவைத் துறை என்ற டர்போ பூஸ்டர் உடன் கூடிய ஹைய் டெக் இன்ஜினும் வேண்டும். உற்பத்தித் துறையைக் காட்டிலும் சேவைத் துறை மூலம் வேகமாக வளர முடியும், ஆனால் ஏற்றுமதி, அதிகப்படியான வேலைவாய்ப்பு, அனைத்து தரப்பினருக்குமான வாழ்விடம் ஆகியவற்றை உற்பத்தித் துறையால் மட்டுமே சாத்தியம்.

தமிழ்நாட்டின் உற்பத்தி துறையை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் மேம்படுத்த சிப்காட், சிட்கோ, சிறப்பு பொருளாதார பகுதி என பல தளம் மூலம் மேம்படுத்தும் வேளையில், சேவைத் துறையை 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் வளர்க மினி டைடல் பார்க் திட்டம் சிறப்பாக ஆயுதமாக இருக்கும் வேளையில்.
வட தமிழகம், கொங்கு மண்டலம், டெல்டா ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஸ்டாலின் அரசு தனது வெற்றிகரமான மினி டைடல் பார்க் திட்டத்தைக் கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்திற்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி போன்று நாகப்பட்டினமும் ஐடி மற்றும் டெக் துறையில் வேகமாக வளர்ச்சி அடையும் வாய்ப்பை பெறும்.
நாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் இப்புதிய மினி டைடல் பார்க்ல் சுமார் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் (IT/ITES) துறையில் 600 பணியிடங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், பல்வேறு மாவட்டங்களில் டைடல் பூங்காக்களை அமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினத்தில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்கா, மத்திய மண்டலத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களை மேம்படுத்துவதற்கும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும்.
நாகப்பட்டினத்தில் அமையவுள்ள இந்த மினி டைடல் பூங்கா, 600 புதிய பணியிடங்களை உருவாக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார். சமீபத்தில் திறக்கப்பட்ட தஞ்சாவூர், சேலம் ஆகிய நகரங்களில் திறக்கப்பட்ட மினி டைடல் பார்க் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல் நாகப்பட்டின மக்களுக்கும் இது ஜாக்பாட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களுக்கு பெயர் பெற்ற ஒரு பகுதியாக இருந்தாலும், இந்த புதிய மினி டைடல் பூங்காவின் மூலம், தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அடையாளத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications