இந்தியாவில் ஏராளமான சாதனை தொழிலதிபர்கள் உருவாகி பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தொழில் சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்கின்றனர். அப்படியொரு சாதனை தொழிலதிபர்தான் மிஸ்பா அஷ்ரப். மத்திய வகுப்பு மக்களுக்கு எப்படி சேமிக்க வேண்டும் முதலீடு செய்ய வேண்டும் என வழிகாட்டும் ஜார் என்ற நிறுவனத்தின் அதிபர்.
இந்திய குடும்பத்தினர் தங்கத்தை எப்படி பாரம்பரியமான முதலீடு விருப்பமாகக் கருதுகின்றனர் என்ற அடிப்படையில் இந்தத் தொழிலை அஷ்ரப் தொடங்கினார். இருப்பினும் அஷ்ரபின் சாதனைப் பயணம் அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.

பிகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மிஸ்பா அஷ்ரப். அவரது தாய் குடும்பத்தலைவி. அவரது தந்தை ஒரு ஆசிரியர். கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானபோதிலும் மிஸ்பா எப்போதும் உயரத் துடித்துக் கொண்டே இருப்பார்.
கல்லூரி முதலாண்டிலேயே படிப்பை நிறுத்திவிட்ட மிஸ்பா ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என நினைத்தார். இதற்காகவே அவர் படிப்பை விட்டார். சிபோலா என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த முயற்சி தோல்வையை சந்தித்து. 4 ஆண்டுகள் கழித்து மார்ஸ்பிளே என்ற மற்றொரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
மார்ஸ்பிளே மளமளவென அசுர வளர்ச்சியை அடைந்தது. இதைத் தொடர்ந்து தனது மூன்றாவது நிறுவனமான ஜார்-ஐ கொரானா பெருந்தொற்றுக் காலத்தின்போது தொடங்கினார். ஜார் ஒரு ஆப் ஆகும். மிஸ்பாவுடன் நிஷ்சே என்பவர் இணை நிறுவனராக உள்ளார்.
ஜார் ஆப் 100 சதவீதம் பாதுகாப்பானது. உங்களது தினசரி சேமிப்பு மற்றும் தங்கத்திலான முதலீடுகளை செய்யலாம். சேப்கோல்டு மூலம் பவர் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வங்கி நெட்வொர்க்கின் மூலம் உங்களது பண வர்த்தனைகள் நடைபெறும்.
ஒரு வாடிக்கையாளர் செய்யும் முதலீட்டில் 2 சதவீதத்தை கமிஷனாக ஜார் நிறுவனம் வசூலிக்கிறது. ஜார் ஆப்பில் குறைந்தபட்ச லாக்கிங் பீரியடு இல்லை. எனவே நீங்கள் பணத்தை விற்கவோ முதலீடு செய்யவோ 24 மணிநேரத்துக்குள் செய்யலாம்.
தினசரி தங்க சேமிப்பு ஆப்பான ஜார், பண சேமிப்பை ஒரு வேடிக்கையாக உணரச் செய்கிறது. ஆன்லைனில் நீங்கள் செலவிடும் தொகையில் ஒரு சிறிய பங்கை இதன்மூலம் சேமிக்க வைக்கிறது. வீட்டில் உள்ள உண்டியல் போல செயல்படுகிறது. நீங்கள் செலவு செய்யும் பணத்தை எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்குத் தெரிவித்து அதில் சேமிக்க வைக்கிறது.
மிஸ்பா அஷ்ரப் தொடங்கிய பிளாட்பாரத்தில் 11 மில்லியன் உறுப்பினர்கள் வெறும் 18 மாதங்களில் சேர்ந்தனர். நிதி சேகரிப்பு மூலம் அவரது நிறுவனம் 58 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை திரட்டியது. இந்திய மதிப்பில் இது ரூ.476 கோடியாகும்.
தனது ஸ்டார்ட் அப் நிறுவனமான ஜாருக்கு மேலும் நிதியை மிஸ்பா திரட்டினார். அதன் மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மிஸ்பாவின் நிகரச் சொத்து மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர். இந்திய பண மதிப்பில் 164 கோடியாகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications