Magalir Urimai Thogai: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமை தொகையை ரூ.1000 × 3 = ரூ.3000 முன்கூட்டியே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், அடுத்த திமுக ஆட்சியில் இந்த தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதியும் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதோடு கோடை கால சிறப்பு ரூ.2000 உட்பட மொத்தம் ரூ.5000 பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சென்று சேர்ந்துள்ளது.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
மகளிர் உரிமை தொகை விநியோகத்திற்கு எதிர்கட்சிகள் தடை போட முயற்சிப்பதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை பெண்களுக்கு மொத்தம் ரூ.8000 நேரடியாக வங்கிக் கணக்கில் சென்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார், அதில் ஒரு முக்கிய வாக்குறுதி என்றால் மகளிர் உரிமை தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி என்றால் அடிப்படையில் மகளிர் உரிமை தொகை வழங்கும் இந்த சமூக நல திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அவர்களும் எதிர்க்கவில்லை.
ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த திமுக ஆட்சியில் இந்த தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதியும் அளித்துள்ளது தேர்தல் நேர அதிரடி அறிவிப்பு தான் என்ற விமர்சனம் இருந்தாலும், எதிர்கட்சிகள் கூட இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை, அவர்களும் ரூ.1500 ஆக உயர்த்த வேண்டும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.
மூத்த பத்திரிகையாளர் தராசு ஷயாம் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் மகளிர் உரிமை தொகை இந்த அறிவிப்பை பெரிதும் வரவேற்றுள்ளார். "இது தேர்தல் நேர அதிரடி என்றாலும், கிராமப் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். 1000 ரூபாய் முழுவதும் அன்றாட செலவுக்கு செலவழிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சேமிக்கப்படுகிறது. 3000-5000 ஆக சேர்ந்த பிறகு, நடவு கூலி, அறுவடை கூலி, மகன்கள்-மகள்களின் படிப்பு செலவு, திருமண செலவு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது கிராமப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்டாலின் முன்கூட்டிய கணிப்பு
மகளிர் உரிமை தொகை அறிவிப்புக்கும், விநியோகத்திற்கும் தேர்தல் ஆணையம் தடை விதிக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும், முதலமைச்சர் அதை முன்கூட்டியே எதிர்பார்த்து திட்டமிட்டுள்ளார். பொதுவாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களுக்கு (existing schemes) தடை விதிப்பதில்லை. இந்த திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதால் தடை வர வாய்ப்பு குறைவு என்று தராசு ஷயாம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு கிராமப் பெண்களுக்கு பெரும் நன்மை
தமிழ்நாட்டின் கிராமங்களில் பெண்கள் தங்கள் சொந்த வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ரூ.1000 உரிமை தொகை அவர்களுக்கு சுயமரியாதையையும், சிறிய சேமிப்பையும் தருகிறது. இப்போது ரூ.3000 முன்பணம் + அடுத்த ஆட்சியில் ரூ.2000 உயர்வு என்ற அறிவிப்பு, கிராமப் பெண்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னை அருகிலுள்ள கிராமங்கள் முதல் திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பெண்கள் இந்த திட்டத்தை பெரிதும் வரவேற்கின்றனர்.
ஜெயலலிதா கால திட்டங்களுடன் ஒப்பீடு
தராசு ஷயாம் மேலும் கூறுகையில், "ஜெயலலிதா காலத்தில் கரவை மாடு, ஆடு இலவசமாக கொடுக்கப்பட்டது. அதற்கும் விமர்சனம் இருந்தது. ஆனால் அது பல பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது. அதேபோல் ஸ்டாலின் அரசின் மகளிர் விடியல் பஸ் திட்டமும் பெரும் உதவியாக இருந்தது. இப்போது 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம் அதைவிட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
பொருளாதார நிபுணர்கள் vs சமூகவியலாளர்கள்
பொருளாதார நிபுணர்கள் இந்த திட்டத்தை "நிதிச் சுமை" என்று விமர்சிக்கின்றனர். ஆனால் சமூகவியலாளர்கள் இதை "கிராமப் பெண்களின் உரிமை" என்று வரவேற்கின்றனர். தராசு ஷயாம், "இந்தியா போன்ற ஏற்றத்தாழ்வு நிறைந்த நாட்டில் இத்தகைய திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன" என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டு கிராமப் பெண்களுக்கு இது ஒரு பெரிய நம்பிக்கை ஒளியாக அமைந்துள்ளது. அடுத்த ஆட்சியில் ரூ.2000 ஆக உயரும் என்ற வாக்குறுதி, பெண்களின் சுயசார்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications