கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 1,00,709 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கோயம்புத்தூரை உலகத் தரம் வாய்ந்த தொழில்மயமாக மாற்றும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு
TN Rising முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையான புள்ளிவிவரங்களை நான் இங்கே வைக்கிறேன்" என்று தொடங்கினார். அவர் மேலும் கூறுகையில், "திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 11 லட்சத்து 40 ஆயிரத்து 731 கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். "திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை" என்று அவர் உரத்துச் சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன.
இம்மாநாட்டில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்
மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்தன. கோயம்புத்தூரில் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல்ஸ் நிறுவனம் மத்திய சமையலறை அமைக்க 300 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும்.
சாண்ட்பிட்ஸ் பவுண்டரீஸ் நிறுவனம் (Sandfits Foundries) வாகன உதிரிபாகங்கள் மற்றும் டக்டைல் இரும்பு வார்ப்பு தயாரிப்பில் 117 கோடி ரூபாய் முதலீடு தெய்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஜெய் ஜெய் மில்ஸ் நிறுவனம் ஒருங்கிணைந்த நெசவுத் தொழிற்சாலை அமைக்க 405 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும்.
அதேபோல் ஜனாடிக்ஸ் இந்தியா நிறுவனம் (Janatics India) தொழிற்சாலை ஆட்டோமேஷன் உதிரிபாகங்கள் மற்றும் பவுண்டரி தயாரிப்புக்கு 250 கோடி ரூபாய் செலவிட்டு 250 பேருக்கு வேலை உருவாக்குகிறது.
இந்த மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் கோயம்புத்தூரை மட்டும் செழிப்பாக்கவில்லை; ஈரோடு, திருப்பூர் போன்ற அண்டை மாவட்டங்களுக்கும் பயனளிக்கின்றன. கோயம்புத்தூர் இனி வெறும் "மான்செஸ்டர் ஆஃப் சவுத் இண்டியா" இல்லை; ஐடி, ஆட்டோமொபைல், செமிகண்டக்டர், ஏரோஸ்பேஸ் என பல புதிய துறைகளின் மையமாகவும் மாறி வருகிறது.
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications