இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் சக்தி கொண்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தமிழக முதல்வர், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் முக்கிய அதிகாரிகள் கொண்ட பெரிய டீம் தற்போது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் உள்ளது.
இந்த பயணத்தைத் துவங்கும் போதே 30 முக்கிய கூட்டங்களை நடத்தும் திட்டத்துடன் தமிழக அரசு அமெரிக்கா சென்ற நிலையில், தற்போது தினமும் ஒரு அதிரடி என்ற வகையில் இந்த அமெரிக்கா பயணத்தில் அடுத்த தமிழ்நாடு அரசு அந்நாட்டு நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வரிசையில் செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ஒரே நாளில் 3 ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

லிங்கன் எலக்ட்ரிக் உள்ளிட்ட 3 நிறுவனங்களுடன் சுமார் ரூ.850 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளதாக முதல்வர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை டிவீட் செய்து தெறிக்கவிட்டு உள்ளார்.
செப்டம்பர் 5 அன்று சிகாகோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுப் பரிமாறப்பட்டன.
ஆர்க் வெல்டிங், ரோபோடிக் வெல்டிங் அமைப்புகள் மற்றும் பிளாஸ்மா மற்றும் ஆக்ஸிஃப்யூல் கட்டிங் உபகரணங்களில் முன்னணி நிறுவனமான லிங்கன் எலக்ட்ரிக் (Lincoln Electric), சென்னையின் புறநகரில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதியை விரிவுபடுத்த ரூ.500 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதை தொடர்ந்து செமிகண்டக்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் தயாரிப்பாளரான விஷய் பிரசிஷன் (Vishay Precision), பல நாடுகளில் செயல்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்சார் மற்றும் டிரான்ஸ்டியூசர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ரூ.100 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது, இது ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலவ என்பதால் இந்த 100 கோடி முதலீட்டில் இந்த உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோமொட்டிவ் எலக்ட்ரிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளரான விஸ்டியன் கார்ப்பரேஷன் (Visteon Corporation), சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ரூ.250 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
லிங்கன், விஷய் மற்றும் விஸ்டியன் ஆகியவை அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அரசு தெரிவித்தது.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications