முக ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்தில் தற்போது சிகாகோ-வில் இருந்து தினமும் பல நிறுவனங்களையும், தொழில்துறையினரைச் சந்தித்து வரும் வேளையில் நேற்று 3 முக்கியமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஒரு நிறுவனம் 2000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கம்யூனிகேஷன் நெட்வொர்க நிறுவனமான திரில்லியண்ட் (Trilliant), தமிழ்நாட்டில் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம், நேற்று சிகாகோ-வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் Trilliant மற்றும் தமிழ்நாடு அரசு மத்தியில் கையெழுத்தானது.

இந்த தொழிற்சாலை, தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய தொழில்துறை பகுதியில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சிஸ்கோ, நோக்கியா உள்ளிட பல நிறுவனங்கள் டெலிகாம் மற்றும் கம்யூனிகேஷன் பொருட்களைத் தயாரித்து வரும் வேளையில், இந்த முக்கியமான லிஸ்ட்டில் தற்போது Trilliant இணைய உள்ளது.
Trilliant அமைக்கும் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழிற்சாலை மூலம், பல நூறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரில்லியண்ட், தனது தொழில்நுட்ப திறன்களைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கியமான பங்களிப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதோடு, திரில்லியண்ட், சென்னையில் குளோபல் டெவலப்மென்ட் மற்றும் சப்போர்ட் சென்டரை அமைக்க உள்ளது. இந்த புதிய ஜிசிசி அலுவலகத்தின் மூலம் சென்னையில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும், இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு திரில்லியண்டின் சேவைகளுக்கான சப்போர்ட் சேவைகளும் சென்னையில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, திரில்லியண்ட் போன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 27 முதல் பதினைந்து நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். முதல்வரின் அமெரிக்கப் பயணத்தின் துவக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்ற அவர் தற்போது சிகாகோ-வில் உள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு இந்த அமெரிக்க பயணம் மிகவும் முக்கியமானதாக அமைய உள்ளது. முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 11 அன்று சிக்காகோவிலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 12 அன்று சென்னை வர உள்ளார்.
More From GoodReturns

படுகொலை செய்யப்பட்ட ஈரான் தலைவர் கமேனியின் இறுதி ஊர்வலம் ஒத்தி வைப்பு: காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications