இந்தியாவின் முன்னணி பின்டெக் சேவை நிறுவனமான MobiKwik வைப்பு நிதிக்கு சுமார் 12 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது.
வங்கி வட்டி விகிதங்களை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமான வட்டி விகிதத்தை அளிக்கும் நிலையில் MobiKwik ஏற்கனவே தனது தளத்தில் நடைமுறையில் வைத்திருந்த XTRA என்னும் திட்டத்தைப் புதுப்பித்து Xtra Plus என்ற இப்புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் MobiKwik தளத்தில் Xtra என்னும் திட்டத்தின் கீழ் Transactree Technologies Pvt Ltd உடன் இணைந்து இந்த முதலீட்டுத் திட்டத்தை அளிக்கிறது.
Xtra திட்டம்
இத்திட்டத்தின் விதிமுறைப்படி வைப்பு நிதிக்கு வருடம் 12 சதவீத வட்டி வருமானத்தை அளிக்கிறது. இது Xtra என்னும் திட்டத்தில் இருந்தது, ஆனால் Xtra Plus கீழ் 3 மாத லாக் இன் காலத்துடன் 12.99 சதவீதம் வரையில் வட்டி வருமானம் அளிப்பதாகவும், இதற்கு எவ்விதமான வித்டிராவல் கட்டணம், முதலீட்டுக் கட்டணம் இல்லாமல் பிக்சட் டெப்பாசிட் சேவை அளிக்கப்படுகிறது என நியூஸ்18 தெரிவித்துள்ளது.
ஆய்வு முக்கியம்
ஆனால் Xtra திட்டத்திற்கு 12 சதவீத வட்டி வருமானம் அளிப்பதாக MobiKwik தளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமெனில் முழுமையாக ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள். நிதியியல் முதலீடுகள் எப்போது சொந்தமாக மட்டுமே எடுக்க வேண்டும்.
Xtra Plus திட்டம்
MobiKwik தளத்தில் இந்த Xtra Plus திட்டத்தின் கீழ் முதலீடு செய்த பணத்தை 30 நாட்களுக்குள் திரும்பப் பெற்றால் எவ்விதமான வட்டியும் இருக்காது என்றும், முதிர்வு காலத்திற்கு முன்பு பணத்தை வித்டிரா செய்தால் 8 சதவீத வட்டி வருமானம் மட்டுமே அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
10 லட்சம் வரை
மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் குறைந்த பட்சம் 1000 ரூபாய் முதல் 10 லட்சம் வரையில் முதலீடு செய்து 12.99 சதவீத வட்டி வருமானத்தைப் பெற முடியும். இதேபோல் MobiKwik தளத்தில் இந்த Xtra Plus திட்டத்தில் நீங்கள் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐ-யிடம் இருந்து நெட் வொர்த் சான்றிதழ் வாங்க வேண்டும்.
18 வயது
இத்திட்டத்தில் 18 வயதிற்கு மேல் பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு கொண்ட அனைவரும் முதலீடு செய்யலாம். என்ஆர்ஐ-கள் NRO அக்கவுண்ட் வாயிலாக முதலீடு செய்ய முடியும்.
சில்லறை பணவீக்கம்
இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திய பின்பு பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தியது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 5 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் பிப்ரவரி 15, 2023 முதல் அமலுக்கு வரும் என்றும், இது 2 கோடி ரூபாய்க்கும் கீழ் உள்ள வைப்பு நிதிக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்கள்
இதைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி 7.10 சதவீத வட்டி வருமானம் வழங்கும் 400 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. மேலும் வழக்கம் போல் அனைத்து வைப்பு நிதி காலத்திற்கும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டி விகிதத்தில் கூடுதல் வருமானத்தைப் பெறுவார்கள்.
More From GoodReturns

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications