இந்திய டெலிகாம் துறை ஜியோ அறிமுகதிற்கு பின் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும் குறிப்பாக வர்த்தக சரிவும், வருவாய் சரிவு, நிறுவன இணைப்பு, நிறுவன மூடல் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்திய டெலிகாம் சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணம் ஜியோ ஆனால் ஜியோ மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை இந்த 3 வருடத்தில் கண்டுள்ளது. 20, 25 ஆண்டில் ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் அடைந்த வளர்ச்சியை ஜியோ வெறும் 3 வருடத்தில் அடைந்துள்ளது வியக்கத்தகும் விஷயம்.
தற்போது டெலிகாம் துறை அடைந்துள்ள வருவாய் சரிவை ஈடுசெய்யும் வகையில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இணைந்து டெலிகாம் சேவை கட்டணத்தை அதிகளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது மக்களை பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலிகாம் வாடிக்கையாளர்கள்
கடந்த 3 வருடமாக ஏற்பட்ட வருவாய் சரிவை ஈடுசெய்யவும், பழைய வருவாய் நிலையை மீண்டும் எட்டிவிட வேண்டும் என இந்தியாவில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான டெலிகாம் வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவைக்கா செலவிடும் சராசரி தொகையை அதிகரித்து வருமானம் பெற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
இதன் படி அடுத்த 2020ஆம் வருடத்தின் இறுதிக்குள் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
மலிவு விலை
உலகிலேயே இந்தியாவில் தான் தற்போது மிகவும் குறைந்த விலையில் டெலிகாம் சேவைகள் கிடைக்கிறது. இதுவே தான் டெலிகாம் நிறுவனங்களின் மோசமான வருவாய் சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. டெலிகாம் நிறுவனங்களை வர்த்தக வீழ்ச்சியில் இருந்துத காப்பாற்ற மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் என்று கூட பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆனால் மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரம் ஊழியர்களுக்கு வீஆர்எஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.
முன்னணி நிறுவனங்கள்
AGR பிரச்சனையில் டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக முடிவுகளை உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை, இதனால் வருவாய் அளவுகளை கூட்ட வோடபோன் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களது டெலிகாம் சேவையின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
வோடபோன் ஐடியா
இந்த மோசமான வர்த்தக போட்டியில் வோடபோன் ஐடியா திவாலாகி நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என பல சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இது உண்மையானால் சந்தையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஏர்டெல் மற்றும் ஜியோ அதிகளவிலான கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications