நாடு முழுவதும் நாளை 77வது குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். குடியரசு தின கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையிலான பல்வேறு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார வாகன அணி வகுப்பு மற்றும் நாட்டின் முன்னேற்றத்தை பறைசாற்றக்கூடிய விஷயங்கள், அதிநவீன தயாரிப்புகள் உள்ளிட்டவை பல்வேறு துறை அமைச்சகங்களாலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. குடியரசு தின அணிவகுப்பு என்பது ஒட்டுமொத்த நாடு மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளும் எதிர்பார்க்கக் கூடிய ஒரு நிகழ்ச்சி.

பிரிட்டிஷ் காலத்து பாரம்பரியத்தை பின்பற்றி ரெய்ஷினா ஹில்ஸ் பகுதியில் தொடங்கக்கூடிய இந்த அணி வகுப்பு இந்தியா கேட் வழியாக சென்று செங்கோட்டையில் நிறைவு பெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசிப்பார்கள்.
இந்தியா குடியரசு தினம் கொண்டாடத் தொடங்கியது முதலே ஒவ்வொரு ஆண்டுமே பிரம்மாண்டமான முறையில் இந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் என்பது நடத்தப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டில் மட்டும் மத்திய அரசு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் கொண்டாட்டங்களுக்காக 320 கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறது. ஆனால் அண்மை காலங்களில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.ஆனால் நிச்சயமாக இது ஆயிரம் கோடி ரூபாயை தொட்டிருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முதல் குடியரசு தின கொண்டாட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்தது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. 1950 ஆம் ஆண்டு இந்தியா தன்னுடைய முதல் குடியரசு நாளை கொண்டாடியது. அப்போது 11,093 ரூபாய் செலவில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். 1956 ஆம் ஆண்டில் இது 5,75,000 ரூபாய் என உயர்ந்தது .1971 ஆம் ஆண்டில் 17 லட்சம் ரூபாய் என அதிகரித்தது 1973 ஆம் ஆண்டில் 23 லட்சம் என்றும் 1988 ஆம் ஆண்டில் 69 லட்சம் ரூபாய் என்று உயர்ந்ததாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது.
முதல் குடியரசு தின கொண்டாட்டம் என்பது மிக எளிமையாகவே நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் எளிமையான முறையில் அணிவகுப்பு நடந்தது. மேஜர் தயான் சந்த் மைதானம் என அறியப்படும் இடத்தில் தான் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. முதல் குடியரசு தின அணிவகுப்பை காண இந்தோனேஷிய அதிபர் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து இந்தியா அப்போது தான் மீண்டு வந்து கொண்டிருந்தது, எனவே நிவாரண முகாம்களிலும், ஊரக பள்ளிகளிலும் தான் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பொம்மைகள் வழங்கப்பட்டன. மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதில் தான் அரசு கவனம் செலுத்தியது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications