ஏன் பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணிக்கு மாற்றப்பட்டது தெரியுமா?

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23-ஆம் தேதி அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறையினர்களும் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். வரும் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நிதி கொள்கைகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் இருக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் சற்று அதிகரித்துள்ளன. 2024-ஆம் ஆண்டின் லோக்சபா தேர்தலில் தொடர்ச்சியாக 3-வது முறையாக வெற்றி பெற்ற மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவின் வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை இந்த பட்ஜெட் கொண்டிருக்கும். ஜூலை 23-ஆம் தேதி காலை 11:00 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏன் பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணியிலிருந்து காலை 11 மணிக்கு மாற்றப்பட்டது தெரியுமா?

ஆனால், ஒன்றிய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு லோக்சபாவில் தாக்கல் செய்வது வழக்கமாக இருந்தாலும், இது எப்போதும் இப்படி இல்லை என்பது சிலருக்குத் தெரியாது. முன்னதாக, பட்ஜெட் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

முந்தைய பட்ஜெட் தாக்கல் நேரம்:1999-ஆம் ஆண்டு வரை, காலனித்துவ காலத்தில் இருந்து வந்த வழக்கப்படி, மத்திய பட்ஜெட் மக்களவையில் மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம், பிரிட்டிஷ் அரசாங்கம் லண்டனிலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் அறிவிப்புகளை வெளியிட முடிந்தது.

இங்கிலாந்தை விட இந்தியா 5 மணி நேரம், 30 நிமிடங்கள் முன்னால் உள்ளது. இந்த அட்டவணையின்படி, இந்தியாவில் காலை 11:30 GMT என்பது மாலை 5 மணிக்கு சமமாக இருந்தது. ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நேரம் மாற்றப்படவில்லை. முந்தைய அரசுகள் நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கவழக்கங்களை பின்பற்றின.

பட்ஜெட் தாக்கல் புதிய நேரம்: 1999 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் நிர்வாகத்தின் கீழ் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவினால் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மாலை 5 மணி வழக்கம் முதல் முறையாக மாற்றப்பட்டது.

இந்த மாற்றம் பல காரணங்களுக்காக மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தனது சொந்த நேர மண்டலத்தைப் பின்பற்ற ஆரம்பித்தது. அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை மதிப்பாய்வு செய்து விவாதிக்க அதிக நேரம் வழங்குவதற்காகவும் அரசு காலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதை நடைமுறைப்படுத்தின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+