எக்சிட் போல் முடிவுகள் மக்கள் மத்தியிலும், பொருளாதாரம், வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் சமுக வலைத்தளத்தில் இதுகுறித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானாலும் இப்போதே மோடி ஆட்சி அமைத்துவிட்டதாக நம்ப துவங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாகவே திங்கட்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத, கணித்திடாத வகையில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நாளை ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது முறை ஆட்சியில் RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா-வின் ஆட்சியில் தனது முக்கியமான எதிர்பார்ப்புகளை டிவிட்டரில் பட்டியலிட்டு உள்ளார்.
பிஜேபி தலைமையிலான என்டிஏ கூட்டணி அமோக வெற்றியை பெறும் என்பதை எக்சிட் போல் வாயிலாகத் தெரிய வந்த நிலையில் தொழில்துறையினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வேளையில் RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா-வின் ட்வீட் பல தொழிலதிபர்களின் சொந்த வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா சுகாதாரம் மற்றும் கல்வி முதல் எரிசக்தி மற்றும் காலநிலை முயற்சிகளில் வரையில் அதிக முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா X பதிவில், வரவிருக்கும் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பத்து எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டார்.
1. ஒரே நாடு, ஒரே தேர்தல்
2. யூனிபார்ம் சிவில் கோட்
3. விவசாய சீர்திருத்தங்கள்
4. உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள்
5. டிஜிட்டல் மயமாக்கலுக்குக் கூடுதல் ஊக்குவிப்பு
6. சுகாதாரம் மற்றும் கல்வியைச் சேவைகளை விரிவுபடுத்துதல்
7. நாட்டில் வேலை உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்
8. தொழிலாளர் சீர்திருத்தங்கள்
9. எனர்ஜி மற்றும் கிளைமேட் பிரிவில் அதிக முதலீடுகள்
10. இந்தியாவின் உலகளாவிய ப்ரோபைல்-ஐ பெரிய அளவில் வளர்த்தல் ஆகியவை தனது டாப் 10 எதிர்பார்ப்பாக இருப்பதாக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

RPG குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா X பதிவுக்குச் சிலர் பதில் அளித்துள்ளனர், ஒரு பயனர் மேலும் ஐந்து எதிர்பார்ப்புகளைப் பட்டியலிட்டார்,
11. மீண்டும் மீண்டும் வங்கிகள் KYC கேட்பதை நிறுத்துங்கள்
12. மீம்ஸ் போட்டால் சிறை இல்லை
13. வாட்ஸ்அப்பில் குட்மார்னிங் செய்திகளுக்கு முழுமையான தடை
14. ஒரு நபர் குடித்துவிட்டு அல்லது சோகமாக இருக்கும்போது முட்டாள்தனமான எதையும் வாங்குவதை நிறுத்தும் வகையில் UPI மேம்படுத்த வேண்டும்
15. உலகக் கோப்பை கோப்பை

மற்றொரு நபர் செய்த ட்வீட்டில்
1. ஏமாற்றுவதை நிறுத்துங்கள்
2. தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்.
3. தவறான மற்றும் புனையப்பட்ட தரவுகளை உலகிற்கு வழங்குவதை நிறுத்துங்கள்.
4. மற்றவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கவும்.
5. நாசீசிஸ்டிக் போக்குகளை நிறுத்தவும்.
6. டெலிப்ராம்ப்டர்களை நம்புவதைத் தவிர்க்கவும்.
7. உள்ளூர் பிஜேபி கட்சி அலுவலகத் தலைவரைப் போல் இல்லாமல் பிரதமரைப் போல நடந்து கொள்ளுங்கள். என ட்வீட் செய்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications