மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக மதுரை நகரம் இருக்கிறது. மதுரையின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில் திகழ்கிறது. இதை தாண்டி மதுரை தற்போது வேலைவாய்ப்பு ரீதியாகவும் ஐடி நிறுவனங்களுக்கான நகரமாகும் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

அந்த வகையில் மதுரை நகரின் வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் வகையிலான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!!இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

இதனை அடுத்து மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மதுரை விமான நிலையம் மேம்படுத்தப்படுவதன் மூலம் தென் தமிழக பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read

முன்னதாக மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் 28.8 கோடி ரூபாய் மதிப்பிலான சுற்றுசாலை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் டெண்டர் கோரி இருந்தது. இந்த சூழலில் தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை தந்திருக்கிறது.

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!!இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

தற்போது மதுரை விமான நிலையம் என்பது கஸ்டம்ஸ் ஏர்போர்ட் என்ற விமான நிலைய பிரிவின் கீழ் இருக்கிறது. அதாவது உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் மட்டுமே மதுரை விமான நிலையத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கும் சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்க முடியும். ஆனால் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும் போது வெளிநாட்டை சேர்ந்த விமான சேவை நிறுவனங்களும் இனி நேரடியாக மதுரைக்கும் மதுரையிலிருந்தும் வெளிநாடுகளுக்கும் விமான சேவைகளை இயக்க முடியும்.

நீண்ட காலமாகவே மதுரை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களை விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு இந்த நல்ல செய்தியை தந்து இருக்கிறது.

Recommended For You

அடுத்தகட்டமான சர்வதேச விமான நிலையத்திற்கு ஏற்ற அனைத்து உள்கட்டமைப்புகளும் மதுரை விமான நிலையத்தில் கொண்டுவரப்படும். ஓடு பாதை விரிவாக்கம் செய்யப்படும், புதிய முனையங்கள் அமைக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் தமிழகம் வர இருக்கக்கூடிய சூழலில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான முடிவினை மத்திய அமைச்சரவை அறிவித்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை திருச்சிக்கு வருகை தந்து 5000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+