டெல்லி: பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்திய அரசு மக்களைக் கவரும் வகையில் பல முக்கிய திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக வளர்ச்சி திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் மாநில வாரியாக, பிராந்திய வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் பெரும் பகுதி அரசு ஊழியர்களையும், சாமானிய மக்களையும் கவரும் இரு முக்கியமான திட்டங்களுக்கு இன்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்துவதற்கான முடிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என ஈடி நவ் வெளியிட்டுள்ளது. இத்தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
50 சதவீதம்: மத்திய அமைச்சரவை இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகிய இரண்டும் 50 சதவீதத்தை எட்டும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களுக்குக் கூடுதல் சம்பளமும், கூடுதல் பென்ஷன் தொகையும் கிடைக்கும்.
LPG மானியம்: இதைத்தொடர்ந்து மத்திய அரசு சமையல் எரிவாயு மானியத் திட்டத்தை (LPG subsidy scheme) அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் ஈடி நவ் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை ரூ.300 ஆக உயர்த்தியது மத்திய அரசு.
உஜ்வாலா யோஜனா திட்டம்: இந்த மானிய திட்டத்தை அடுத்த ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அரசு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாகச் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.1,650 கோடி செலவிடப்பட உள்ளதாக முன்பு மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாகூர் தெரிவித்திருந்தார்.
நுகர்வோர் விலை குறியீடு: அகவிலைப்படி உயர்வின் அளவை தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு நிர்ணயிக்கிறது. இந்த நிலையில் கடந்த 12 மாதங்களுக்கான சராசரி 392.83 புள்ளிகளாகும்.
தொழிலாளர் அமைச்சகம்: இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50.26 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் ஆய்வு அலுவலகம் (Labour Bureau) ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI-IW) தரவுகளை வெளியிடுகிறது.
ஜனவரி மற்றும் ஜூலை: அகவிலைப்படி என்பது ஊழியர்களுக்கானது, அகவிலை நிவாரணம் என்பது ஓய்வூதியர்களுக்கானது. ஒவ்வொரு ஆண்டும், பொதுவாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் இரண்டு முறை உயர்த்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம்: கடைசியாக அகவிலைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது, அப்போது அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பணவீக்க எண்ணிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதி ஒப்புதலை மத்திய அரசு வெளியிட உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications