இன்று டெல்லியில் துவங்கிய ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாளின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி20 நாடுகளை மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்குள் வரவேண்டுமென அழைத்தார். ஏற்கனவே இந்தியா எத்தனால், பயோகேஸ், ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்துவதை துவங்கியும், அதற்காக கொள்கை அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார் மற்றும் மற்ற உலகத் தலைவர்களை இந்த முயற்சியில் சேர அழைப்பு விடுத்தார். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி அதாவது Global Biofuel Alliance உருவாக்க உள்ளதாகவும், இதில் மற்ற நாடுகளையும் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

உலகளாவிய பயோஎரிபொருள் கூட்டணியை அமைப்பதற்கான இந்தியாவின் எனர்ஜி மாற்றத்தை விரைவுபடுத்தும் திட்டத்தை முன்வைத்து மாற்று எரிபொருள் நோக்கிய பயணம் இது வேகப்படுத்த உதவும் என அறிவித்தார்.
இந்த வருடத்திற்கான G20 தலைமை பொறுப்பை பெற்றுள்ள இந்தியா தான் உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கே அதிகப்படியான நிதியை இந்தியா செலவிடும் வேளையில் தான் மாற்று எரிபொருளுக்கான தேவையும், அவசியமும் உருவாகியுள்ளது.
உலக உயிரி எரிபொருள் கூட்டணி என்பது 2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாரிஸ் தலைமையில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் சர்வதேச சோலார் கூட்டணியை (ISA) போன்றது. இந்த கூட்டணி மூலம் மாற்று எரிபொருளுக்கான தேடல் மற்றும் பயன்பாடு வேகப்படுத்துவது மட்டும் அல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் பரிமாற்றம் இதன் மூலம் எளிதாகும்.
இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பிடிஐக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், 20 முக்கிய பொருளாதாரங்களின் குழுவின் உறுப்பினர்களிடையே பயோபியூயல் எரிபொருளுக்கான உலகளாவிய கூட்டணிக்கான இந்தியாவின் திட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

பயோபியூயல் என்பது பயோமாஸ்-ல் இருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் பயிர்கள், தாவரக் கழிவுகள் மற்றும் நகராட்சி திடக்கழிவுகள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்யும் திறனை படிப்படியாக வளர்த்து வருகிறது இந்தியா.
இதேபோல் கரும்பு மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனால்-ஐ 2025 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதமாகக் கலக்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கம்பிரஸ்ட் பியோகேஸ் (CBG) ஆலைகள் அமைக்கப்படுகின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications