இன்று டெல்லியில் துவங்கிய ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாளின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி20 நாடுகளை மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்குள் வரவேண்டுமென அழைத்தார். ஏற்கனவே இந்தியா எத்தனால், பயோகேஸ், ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்துவதை துவங்கியும், அதற்காக கொள்கை அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார் மற்றும் மற்ற உலகத் தலைவர்களை இந்த முயற்சியில் சேர அழைப்பு விடுத்தார். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி அதாவது Global Biofuel Alliance உருவாக்க உள்ளதாகவும், இதில் மற்ற நாடுகளையும் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

உலகளாவிய பயோஎரிபொருள் கூட்டணியை அமைப்பதற்கான இந்தியாவின் எனர்ஜி மாற்றத்தை விரைவுபடுத்தும் திட்டத்தை முன்வைத்து மாற்று எரிபொருள் நோக்கிய பயணம் இது வேகப்படுத்த உதவும் என அறிவித்தார்.
இந்த வருடத்திற்கான G20 தலைமை பொறுப்பை பெற்றுள்ள இந்தியா தான் உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கே அதிகப்படியான நிதியை இந்தியா செலவிடும் வேளையில் தான் மாற்று எரிபொருளுக்கான தேவையும், அவசியமும் உருவாகியுள்ளது.
உலக உயிரி எரிபொருள் கூட்டணி என்பது 2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாரிஸ் தலைமையில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் சர்வதேச சோலார் கூட்டணியை (ISA) போன்றது. இந்த கூட்டணி மூலம் மாற்று எரிபொருளுக்கான தேடல் மற்றும் பயன்பாடு வேகப்படுத்துவது மட்டும் அல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் பரிமாற்றம் இதன் மூலம் எளிதாகும்.
இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பிடிஐக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், 20 முக்கிய பொருளாதாரங்களின் குழுவின் உறுப்பினர்களிடையே பயோபியூயல் எரிபொருளுக்கான உலகளாவிய கூட்டணிக்கான இந்தியாவின் திட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

பயோபியூயல் என்பது பயோமாஸ்-ல் இருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் பயிர்கள், தாவரக் கழிவுகள் மற்றும் நகராட்சி திடக்கழிவுகள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்யும் திறனை படிப்படியாக வளர்த்து வருகிறது இந்தியா.
இதேபோல் கரும்பு மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனால்-ஐ 2025 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதமாகக் கலக்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கம்பிரஸ்ட் பியோகேஸ் (CBG) ஆலைகள் அமைக்கப்படுகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications